சென்னை: சென்னையில் இன்று முதல்(ஜூன் 30) ஜூலை 6-ம் தேதி வரை 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஜவஹர்லால் நேரு மைதானத்திலும், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் நடத்தவுள்ளது.
ஆடவர் பிரிவில் 24 அணிகளும், மகளிர் பிரிவில் 38 அணிகளும் பங்கேற்கவுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும்.
போட்டி தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும். போட்டிக்கு எஸ்என்ஜே குரூப்ஸ், ஜாஸ் பெர்ப்யூம்ஸ், டிவோசா, ரேடியன்ஸ் ரியால்டி, காவேரி டிஎம்டி பார்ஸ் அன்ட் ஸ்டிரக்ச்சுரல், பிவெல் ஹாஸ்பிட்டல்ஸ், காஸ்கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன.
சாம்பியன் பட்டம் பெறும் ஆடவர், மகளிர் அணிகளுக்கு எஸ்என்ஜே கோப்பை வழங்கப்படும். ஆடவர் பிரிவில் 2-ம் இடம்பெறும் அணிக்கு டிவோசா கோப்பையும், மகளிர் பிரிவில் 2-ம் இடம் பெறும் அணிக்கு ரேடியன்ஸ் ரியால்டி கோப்பையும் வழங்கப்படும். மகளிர் பிரிவில் 3-ம் இடம் பெறும் அணிக்கு காவேரி டிஎம்டி பார்ஸ் கோப்பையும், மகளிர் பிரிவில் 3-ம் இடம் பெறும் அணிக்கு ஜாஸ் கோப்பையும் வழங்கப்படும்.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.