Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது’ – ஸ்மிருதி மந்தனா சிலாகிப்பு
    விளையாட்டு

    ‘இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது’ – ஸ்மிருதி மந்தனா சிலாகிப்பு

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது’ – ஸ்மிருதி மந்தனா சிலாகிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: இந்திய மைதானங்களில் பார்வையாளர் மாடத்தில் இருந்து வரும் மக்களின் ஆரவாரம் சிறப்பானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.

    முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஜியோ ஸ்டார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தது. “17 வயதில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். நான் என் அறையில் இருந்தபோது எனது பெயர் கொண்ட ஜெர்ஸி எனக்கு கிடைத்தது. அதை அணிந்து எடுத்துக் கொண்ட படத்தை என் பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் பகிர்ந்து மகிழ்ந்தேன். அது உணர்வு பூர்வமான தருணம்.

    எல்லோருக்கும் வாழ்வில் சவால் இருக்கும். எங்கள் குடும்பம் சாங்கலியில் இருந்தபோது பெண் பிள்ளைகள் அதிகம் கிரிக்கெட் விளையாட மாட்டார்கள். நான் பயிற்சிக்காக புனே வந்து செல்ல வேண்டும். சில நேரங்களில் 4 முதல் 5 மாத காலம் வரை குடும்பத்தை பிரிந்திருக்க வேண்டும். 14 வயதில் அதை செய்தது எனக்கு சவாலாக இருந்தது.

    காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விளையாடியது மறக்க முடியாத ஒன்று. முயற்சி என்பது இருந்தால் நிச்சயம் அதற்காக நாம் களத்தில் போராடுவோம். அது இப்போதுள்ள அணியில் அதிகம் காணப்படுகிறது. நாங்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளோம்.

    இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. இந்த முறை மைதானத்தில் மக்களின் ஆதரவை பார்க்க ஆவலுடன் உள்ளேன். மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மக்களின் ஆதரவை மைதானத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அந்த வகையில் இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ‘பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள்’ – வருண் சக்ரவர்த்தி பகிர்வு

    September 26, 2025
    விளையாட்டு

    மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா

    September 26, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில்: இந்தியா – இலங்கை இன்று மோதல்

    September 26, 2025
    விளையாட்டு

    கடைசி நாளில் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 243 ரன்கள் தேவை

    September 26, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவுடன் பாக். பலப்பரீட்சை: வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது!

    September 26, 2025
    விளையாட்டு

    ஃபர்ஹான், ராவுஃப் மீது பிசிசிஐ புகார்; சூரியகுமார் மீது பாக். கிரிகெட் வாரியம் புகார்

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நடவடிக்கை
    • மெக்னீசியம் கூடுதல் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க குடல் பாக்டீரியா மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை அதிகரிக்கும்; புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மில்லியன் வயதான மண்டை ஓடு மனிதர்கள் சிந்தனையை விட முன்னதாகவே தோன்றியதாகக் கூறுகிறது, இது ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட பரிணாமக் கோட்பாட்டை சவால் செய்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள்: ஓர் ஆயுத விநியோகஸ்தர் கைது
    • பயன்பாட்டுத் துறையின் தேவை அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பீடுகளை தயாரிக்கவும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.