Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? – முதல் டெஸ்ட் முழு அலசல்
    விளையாட்டு

    இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? – முதல் டெஸ்ட் முழு அலசல்

    adminBy adminJune 26, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? – முதல் டெஸ்ட் முழு அலசல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக லீட்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 371 ரன்​கள் இலக்கை துரத்​திய இங்​கிலாந்து அணி எந்​த​வித நெருக்​கடி​யும் இல்​லாமல் எளி​தாக இலக்கை விரட்டி வெற்றி கண்​டது.

    இந்​திய அணி​யின் முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரும் சிறந்த பங்​களிப்பை வழங்​கினர். ரிஷப் பந்த் இரண்டு ஆக்​கப்​பூர்​வ​மான சதங்​களை அடித்​தார். தொடக்க வீரர்​கள் (யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல்) ஒவ்​வொரு இன்​னிங்​ஸிலும் சிறந்த சதத்தை அடித்​தனர். கேப்​ட​னாக கில்​லும் தனது பங்​குக்கு ஒரு சதத்தை விளாசி​னார்.

    பந்து வீச்​சில் பும்ரா முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​னார். ஆனாலும் இந்​திய அணி தோல்​வியை சந்​தித்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்​தங்​கி​யுள்​ளது. தோற்க முடி​யாத டெஸ்​டில் இந்​திய அணி தேடிச் சென்று தோல்வி அடைந்​தது போன்று லீட்ஸ் போட்டி அமைந்​து​விட்​டது.

    தாக்​கத்தை ஏற்​படுத்​தாத நடு​வரிசை பேட்​டிங் மற்​றும் எந்​த​வித பொறுப்​பும் இல்​லாமல் செயல்​பட்ட பின்​வரிசை பேட்​டிங், பீல்​டிங்​கில் ஏறக்​குறைய ஒரு டஜன் கேட்ச்​களை தவற​விட்​டது, டிஆர்​எஸ் எடுப்​ப​தில் செய்த தவறுகள், கேப்​ட​னாக ஷுப்​மன் கில் முக்​கிய​மான கட்​டங்​களில்

    செய்த பிழைகள் என இந்​திய அணி​யின் தோல்விக்கு அடுக்​கான காரணங்​கள் அணிவகுக்​கின்​றன.

    இரு இன்​னிங்​ஸிலும் இந்​திய அணி​யின் பின்​வரிசை பேட்​டிங் வெறுமை​யாக இருந்​தது. கடைசி 4 இடங்​களில் களமிறங்​கிய வீரர்​கள் இரு இன்​னிங்​ஸிலும் கூட்​டாக சேர்த்​தது வெறும் 9 ரன்​களே. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி​யின் கடைசி 7 விக்​கெட்​கள் 41 ரன்​களுக்​கும், 2-வது இன்​னிங்​ஸில் கடைசி 6 விக்​கெட்​கள் 31 ரன்​களுக்​கும் கொத்து கொத்​தாக தாரை வார்க்​கப்​பட்​டன. நடு​வரிசை​யில் கருண் நாயர் இரு இன்​னிங்​ஸிலும் முறையே 0, 20 ரன்​களும், ரவீந்​திர ஜடேஜா 11, 25 ரன்​களே எடுத்​தனர். ஆல்​ர​வுண்​டர் என்ற அடிப்​படை​யில் விளை​யாடும் லெவனில் முன்​னுரிமை கொடுக்​கப்​பட்ட ஷர்​துல் தாக்​குர் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்​னுக்​கும், 2-வது இன்​னிங்​ஸில் 4 ரன்​களுக்​கும் நடையை கட்​டி​னார்.

    இது ஒரு​புறம் இருக்க ‘கேட்ச்​சஸ் வின் தி மேட்​சஸ்’ என்ற தாரகமந்​திரத்தை இந்​திய வீரர்​கள் கேலிக்​கூத்​தாக்​கினர். முதல் இன்​னிங்​ஸில் 5 கேட்ச்​கள், 2-வது இன்​னிங்​ஸில் 2 கேட்ச்​களை தவற​விட்​டனர். இது​போக ரிஷப் பந்த், மட்டை விளிம்​பில் பட்ட பந்​துகள் சென்ற திசை தெரி​யாமல் ஒரு சில கேட்ச் வாய்ப்​பு​களை கைப்​பற்ற தவறி​னார். கடந்த 20 ஆண்​டு​களில் இங்​கிலாந்​தில் நடந்த டெஸ்​டில் எந்த அணி​யும் இந்த அளவுக்கு கேட்ச்​களை தவற​விட்​டது இல்லை என்ற மோச​மான சாதனையை​யும் படைத்​துள்​ளது இந்​திய அணி.

    அடுத்​தடுத்து பந்து வீச்​சில் ஷர்​துல் தாக்​குர், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. 371 ரன்​கள் இலக்கை இங்​கிலாந்து அணி துரத்​திய நிலை​யில் ஜடேஜா​வின் பந்​துகளில் பென் டக்​கெட் சரள​மாக ரீவர்ஸ் ஸ்வீப் ஷாட்​களில் பவுண்​டரி​கள் அடித்​தார். முதல் இன்​னிங்​ஸில் ஜடேஜா 23 ஓவர்​களை வீசி 68 ரன்​களை விட்​டுக்​கொடுத்து விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை. 2-வது இன்​னிங்​ஸில் 104 ரன்​களை தாரை வார்த்த நிலை​யில் ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார்.

    ஷர்​துல் தாக்​குதர் முதல் இன்​னிங்​ஸில் 6 ஓவர்​களில் 38 ரன்​களை வழங்​கி​னார். 2-வது இன்​னிங்​ஸில் 10 ஓவர்​களில் 51 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட் கைப்​பற்​றி​னார். ஒட்​டுமொத்​த​மாக இரு இன்​னிங்​ஸிலும் இவர்​கள் இரு​வருமே ஆல்​ர​வுண்​டர்​களாக தங்​களது உயரிய பங்​களிப்பை வழங்க தவறினர். பிரசித் கிருஷ்ணா இரு இன்​னிங்​ஸை​யும் சேர்த்து 5 விக்​கெட்​கள் கைப்​பற்​றிய போதி​லும் இங்​கிலாந்து பேட்​டிங் வரிசைக்கு அவரால் பெரிய அழுத்​தம் கொடுக்க முடி​யாமல் போனது.

    முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 5 கேட்ச்​களை தவற​வி​டா​மல் இருந்​திருந்​தால் இங்​கிலாந்து அணியை 2-வது நாள் ஆட்​டத்​தின் போதே குறைந்த ரன்​களில் கட்​டுப்​படுத்தி பெரிய அளவில் முன்​னிலையை பெற்​றிருக்க முடி​யும். 2-வது இன்​னிங்​ஸில் இந்​திய அணி​யின் நடு​வரிசை மற்​றும் பின் வரிசை பேட்​டிங்​கில் கை கொடுத்​திருந்​தால் மேற்​கொண்டு 100 ரன்​கள் சேர்த்து இங்​கிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுக்க முயற்சி செய்திருக்கலாம்.

    பின் வரிசை பேட்​ஸ்​மேன்​கள் ஆட்​ட​மிழப்​ப​தில் தவறு இல்​லை. ஆனால் எதிர் முனை​யில் முறை​யான பேட்​ஸ்​மேன் இருக்​கும் நேரத்​தில் அவருக்கு உறு​துணை​யாக இருப்​ப​தற்​கான வழியை கண்​டறி​யாமல் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாத பந்து வீச்​சுக்கு எதி​ராக பெரிய அளவி​லான ஷாட்​களை விளை​யாட முயன்று எளி​தான முறை​யில் விக்​கெட்​களை இழப்​பது என்​பது பொறுப்​பின்​மை​யையே காட்​டு​கிறது.

    அறி​முக கேப்​ட​னாக ஷுப்​மன் கில் தனது பணியை திறம்பட செய்​தாரா என்​பது கேள்விக்​குறியே. கல்லி திசை​யில் பல முறை ஜெய்​ஸ்​வால் கேட்ச்​களை தவற​விட்ட போதி​லும் அவரை அங்​கிருந்து மாற்​று​வதற்​கான எந்​த​வித முனைப்​பை​யும் ஷுப்​மன் கில் காட்​ட​வில்​லை. மேலும் களத்​தில் ரிஷப் பந்த், கே.எல்​.​ராகுல் ஆகியோரே பெரும்​பாலும் பீல்​டிங் மற்​றும் களவியூ​கங்​கள் அமைப்​ப​தில் பந்து வீச்​சாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​யதை காண முடிந்​தது.

    பந்து வீச்​சாளர்​கள், பீல்​டர்​கள் தவறு செய்​தால் களத்​திலேயே கண்​டிப்​புடன் செயல்​பட்டு அவர்​களை உத்​வேகப்​படுத்தி ஆட்​டத்​தில் துடிப்​புடன் செயல்​படு​வதற்​கான ஊக்​கி​யாக கேப்​டன் செயல்பட வேண்​டும். இந்த விஷ​யத்​தில் ஷுப்​மன் கில் மென்​மை​யாக நடந்​து​கொள்​வது போன்று உள்​ளது. வீரர்​களின் ஓய்​வறை​யில் நல்ல சூழ்​நிலை​யும் மரி​யாதை​யும் இருப்​பது சிறந்த விஷ​யம்​தான். ஆனால் கேப்​டன் பற்றி சிறிது பயமும் இருக்க வேண்​டும். அது​தான் வெற்​றிக்​கான வேட்​கையை முன்​னெடுக்​கும்.

    இந்​திய அணி தோற்க முடி​யாத டெஸ்​டில் தோற்​றதற்கு பின் வரிசை பேட்​டிங் மட்​டுமே முக்​கிய காரணம் என்​றும் கூறி​விட முடி​யாது. ஷுப்​மன் கில் களத்​தில் கேப்​ட​னாக தீவிர​மாக செயல்​பட​வேண்​டிய கட்​டத்​தில் சரி​யான வியூ​கங்​கள் அமைக்க தவறியதும் சரிவுக்கு வழி​வகுத்​தது. கடைசி நாள் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 350 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் பந்து வீச்​சில் தொடர்ச்​சி​யாக அழுத்​தம் கொடுக்​கக்​கூடிய அளவி​லான ஸ்பெல்லை அமைப்​ப​தில் இந்​திய அணி எந்​த​வித திட்​ட​மும் இல்​லாமல் செயல்​பட்​டது.

    ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் வேகக்​ கூட்​டணி ஒருவிக்​கெட் கூட கைப்​பற்ற முடி​யாமல் போனது ஏமாற்​ற​மாக அமைந்​தது. தொடக்​கத்​தில் முகமது சிராஜ் அச்​சுறுத்​தல் கொடுத்​தார். ஆனால் 42 ஓவர்​கள் முதல் 80 ஓவர்​கள் வரை அவர், பந்​து​வீச அழைக்​கப்​பட​வில்​லை. மேலும் ஜஸ்​பிரீத் பும்ரா கடைசி​யாக 65-வது ஓவரை வீசி​னார். அதன் பின்​னர் ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில்அவர், வெளியே அமர்ந்​திருந்​தார். பந்​து​வீச உள்ளே வரவில்​லை.

    இங்​கிலாந்து அணி 82-வது ஓவரில்​தான் வெற்​றியை எட்​டியது. இந்த 17 ஓவர்​களில்​தான் இங்​கிலாந்து அணி 85 ரன்​களை விளாசி​யது. தொடரில் இந்​திய அணி 0-1 என பின்​தங்கி இருக்​கும் நிலை​யில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 2-ம் தேதி பர்​மிங்​காமில் தொடங்​கு​கிறது. போது​மான ஓய்வு உள்​ள​தால் இந்த போட்​டிக்​கு கேப்​டன்​ ஷுப்​மன்​ கில்​லும்​, பயிற்​சி​யாளர்​ கவுதம்​ கம்​பீரும்​ பு​திய ​வியூகங்​களை வகுப்​பது அவசியம்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

    June 28, 2025
    விளையாட்டு

    இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    June 28, 2025
    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

    June 28, 2025
    விளையாட்டு

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்!

    June 28, 2025
    விளையாட்டு

    மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம்

    June 28, 2025
    விளையாட்டு

    உஸ்பெகிஸ்தான் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
    • பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி
    • புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்
    • அதிக நம்பிக்கையான மக்களின் 5 பழக்கம்
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.