Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி
    விளையாட்டு

    இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் பயிற்சியின் கீழ் தைரியமாகக் களமிறக்கிய வாஷிங்டன் சுந்தர் தான் இந்தியாவின் அடுத்த பெரிய ஆல்ரவுண்டர் என்று கூறுகிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

    ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் பிரிஸ்பனில் 2021-ம் ஆண்டு கிராண்ட் அறிமுகப் போட்டியில் களமிறங்கினார் வாஷிங்டன் சுந்தர். அறிமுகப் போட்டியிலேயே பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் வாஷிங்டன். சில முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்களையும் ஆடி கடினமான சூழ்நிலைகளில் பெரும் பங்களிப்பு செய்தார்.

    ஒரு விதத்தில் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு தன் 4 விக்கெட்டுகள் மூலம் வெற்றி வாய்ப்பை உருவாக்கியவரே வாஷிங்டன் சுந்தர்தான்.

    இந்நிலையில் தற்போது வர்ணனையில் இருக்கும் ரவி சாஸ்திரி, “நான் எப்போதுமே வாஷிங்டன் சுந்தரை நேசிக்கிறேன். அவரை சந்தித்த அந்த முதல் நாளிலிருந்தே… இவர்தான்… இவர்தான் இந்திய அணியின் அடுத்த உண்மையான ஆல்ரவுண்டர் என்று நினைத்தேன். அதுவும் இந்தியாவுக்காக பலப்பல ஆண்டுகள் இவர் உண்மையான ஆல்ரவுண்டராகத் திகழ்வார் என்று கருதினேன்.

    இப்போதுதான் அவருக்கு 25 வயதாகிறது. இன்னும் நீண்ட தொலைவு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயணிக்க வேண்டும். பந்துகள் ஸ்பின் ஆகித் திரும்பும் இந்தியப் பிட்ச்களில் அவர் அபாயகரமான பவுலர். நியூஸிலாந்து இந்தியாவில் இவரை ஆடிய போது இவரது திறமையைப் பார்ததோம். மூத்த ஸ்பின்னர்களே ஒன்றுமில்லை என்னும் அளவுக்கு சுந்தர் வீசியதையும் பார்த்தோம்.

    நன்றாக பந்து வீசுவதோடு, அருமையாக பேட்டிங்கும் செய்கிறார். அவர் நம்பிக்கை பெறப் பெற அவர் மென்மேலும் சிறப்படைந்து வளர்வார். வெளிநாட்டு பிட்ச்களிலும் கூட அவருக்கு ஸ்பின் பந்து வீச்சில் ட்ரிஃப்ட் கிடைக்கிறது. அவரது பந்துகளில் தேவைப்படும் அளவுக்கு வேகம் உள்ளது, பேட்டருக்குத் தக்கவாறு பந்தின் வேகத்தை கூட்டி இறக்கி வித்தை காட்டுகிறார்.

    விரல்களில் வித்தையை வைத்திருப்பவர் வாஷிங்டன் சுந்தர். வலுவான விரல்கள் அவருக்கு. நீண்ட நேரம் ஓவர்களையும் அவரால் வீச முடியும். சில வேளைகளில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வேலையையும் அவரால் திறம்படச் செய்ய முடியும்.” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ரவி சாஸ்திரி.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    டெஸ்ட்டில் முதல் அரை சதம் பதிவு செய்த சாய் சுதர்ஷன்; காயத்தால் வெளியேறிய பந்த் – ENG vs IND

    July 23, 2025
    விளையாட்டு

    பவுன்ஸ் பிட்சில் 15/5-லிருந்து மீண்டெழுந்து தோற்ற பாகிஸ்தான் – வரலாறு படைத்த வங்கதேசம் 

    July 23, 2025
    விளையாட்டு

    சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு

    July 23, 2025
    விளையாட்டு

    மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி

    July 23, 2025
    விளையாட்டு

    அப்பா vs மகன்: உள்ளூர் கிரிக்கெட்டில் முகமது நபி பந்தில் சிக்ஸர் விளாசிய ஹசன் இஸக்கில்!

    July 23, 2025
    விளையாட்டு

    கோலியை ‘காப்பி’ அடிக்கிறார் கில்; அவர் மொழியும், வசை வார்த்தைகளும் சரியில்லை- மனோஜ் திவாரி சாடல்

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக கூட்டணியில் விசிக வீழ்ச்சி அடையவில்லை: பழனிசாமிக்கு திருமாவளவன் பதில்
    • 10 அன்றாட உணவுகள் மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட நீங்கள் இன்னும் சாப்பிடலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெஸ்ட்டில் முதல் அரை சதம் பதிவு செய்த சாய் சுதர்ஷன்; காயத்தால் வெளியேறிய பந்த் – ENG vs IND
    • பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு
    • சபுதானாவை எப்படி ஊறவைப்பது என்பது சரியான ஸ்டிக்கி அல்லாத முடிவுகளுக்கு சரியான வழியை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.