Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம்
    விளையாட்டு

    ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம்

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல் சோசலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் 4-ம் தேதி வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை கர்நாடக அரசு அமைத்துள்ளது.

    இந்நிலையில் கப்பன் பூங்கா போலீஸார், ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில‌ கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கை விசாரிக்குமாறு சிஐடி போலீஸாருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார்.

    விமான நிலையத்தில் கைது: இதையடுத்து சிஐடி போலீஸ் துணை ஆணையர் அக்ஷய் தலைமையிலான போலீஸார் நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலேவை கைது செய்தன‌ர். அப்போது அவர் மும்பைக்கு தப்பி செல்ல முயற்சித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்திய ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான‌ டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, மார்க்கெட்டிங் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோர் பெங்களூருவில் உள்ள அவரவர் இல்லங்களில் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இதனிடையே நேற்று மாலை, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ரோலன் கோம்ஸ் (25) அளித்த புகாரின்பேரில் போலீஸார் ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில‌ கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    கைதுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு: கைதான ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலே தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பட் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    அரசியல் செயலர் நீக்கம்: இதனிடையே, இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தியதாக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

    July 27, 2025
    விளையாட்டு

    669 ரன்கள் குவித்த இங்கிலாந்து: 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி போராட்டம்

    July 27, 2025
    விளையாட்டு

    டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை: 3-வது டி20-ல் ஆஸி. வெற்றி

    July 27, 2025
    விளையாட்டு

    அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி

    July 27, 2025
    விளையாட்டு

    பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா!

    July 27, 2025
    விளையாட்டு

    வா.சுந்தரை 69-வது ஓவர் வரை ஓரங்கட்டியது ஏன்? – இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்குப் பின் சர்ச்சைகள்!

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாரீசன் – திரை விமர்சனம்
    • காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • தலைவன் தலைவி – திரை விமர்சனம்
    • திருச்செந்தூர் கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு: பக்தர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
    • ரூ.24 லட்சம் மோசடி: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.