Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவுடன் பாக். பலப்பரீட்சை: வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது!
    விளையாட்டு

    ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவுடன் பாக். பலப்பரீட்சை: வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது!

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவுடன் பாக். பலப்பரீட்சை: வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை செய்கிறது.

    துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இந்நிலையில், இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 31, முகமது நவாஸ் 25 ரன்கள் எடுத்தனர். 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இருப்பினும் எதிரணிக்கு சற்று சவால் தரக்கூடிய ரன்களை ஸ்கோர் செய்தது. வங்கதேச பந்து வீச்சாளர்களில் டஸ்கின் அகமது 3, மெஹதி ஹசன் மற்றும் ரிஷாத் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. ஷாஹின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் பந்து வீச்சு வங்கதேச அணிக்கு சவாலாக அமைந்தது. இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சயிம் அயூப் 2 மற்றும் முகமது நவாஸ் 1 விக்கெட் கைப்பற்றினர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது வங்கதேசம். இதன் மூலம் 11 ரன்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச தரப்பில் ஷமீம் ஹுசைன் 30 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு ஆறுதல் தந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறி உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த தொடரில் மூன்றாவது முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று என இந்த தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ஃபர்ஹான், ராவுஃப் மீது பிசிசிஐ புகார்; சூரியகுமார் மீது பாக். கிரிகெட் வாரியம் புகார்

    September 25, 2025
    விளையாட்டு

    பயிற்சியாளரின் பணி திறமையை வளர்ப்பதா அழிப்பதா?- கம்பீர் செய்வது என்ன?

    September 25, 2025
    விளையாட்டு

    கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் தோல்வி

    September 25, 2025
    விளையாட்டு

    யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    September 25, 2025
    விளையாட்டு

    சிட்னி தண்டரில் அஸ்வின்!

    September 25, 2025
    விளையாட்டு

    கே.எல்.ராகுல், நித்திஷ்குமார் ரெட்டி ஏமாற்றம்: இந்தியா ‘ஏ’ 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சி.வி.சண்முகத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
    • அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலி: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு
    • எச்.ஐ.வி இப்போது முடிவடையலாம்: 2027 முதல் மலிவு விலையில் (எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்) – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாங்சுக்கின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை: லடாக் நிலவரம் பற்றி துணைநிலை ஆளுநர் ஆலோசனை
    • மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதித்த ட்ரம்ப் – அதிரடி அறிவிப்பின் பின்னணி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.