Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி நாங்கள்தான் என்று கூறவில்லை’ – ஆப்கன் கேப்டன் ரஷீத் கான்
    விளையாட்டு

    ‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி நாங்கள்தான் என்று கூறவில்லை’ – ஆப்கன் கேப்டன் ரஷீத் கான்

    adminBy adminOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி நாங்கள்தான் என்று கூறவில்லை’ – ஆப்கன் கேப்டன் ரஷீத் கான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆசியாவில் இந்தியாவுக்குப் பிறகு சிறந்த அணி ஆப்கானிஸ்தான் தான் என்ற அடையாளம் எங்கள் மேல் மற்றவர்கள் ஏற்றிக் கூறுவது. நாங்கள் அவ்வாறு கூறிக்கொள்ளவில்லை என்று கேப்டன் ரஷீத் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அசத்தினார்கள். ஆனால் அரையிறுதியில் இவர்கள் நுழையும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தன் அதிரடி இரட்டைச் சதம் மூலம் தகர்த்தார். கேட்ச்களை விட்டு கிளென் மேக்ஸ்வெல்லை அன்று செய்ய முடியாததைச் செய்ய வைத்தது ஆப்கானிஸ்தான்.

    2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குள் நுழைந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றனர். இதனையடுத்து ஆசியாவில் இந்திய அணிக்குப் பிறகு ஆப்கன் தான் என்று ஊடகத்தில் சில தரப்பினர் பிராண்ட் செய்தனர். இந்த அடையாளத்தை மறுத்த ரஷீத் கான் கூறியதாவது:

    ஊடகங்களில் எங்களை ஆசியாவின் 2-வது சிறந்த அணி என்று எங்களை அழைக்கின்றனர். நாங்கள் அப்படி எங்களைக் கூறிக்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் நாங்கள் நன்றாக ஆடியதை வைத்து இந்த அடையாளத்தை எங்கள் மீது ஏற்றியுள்ளனர். ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் சிலவற்றில் பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்தினோம். அதனால்தான் 2வது சிறந்த அணி என்ற அடையாளம் ஏற்பட்டது.

    எதிர்காலத்தில் நாங்கள் சரியாக ஆடவில்லை எனில் அந்த எண் 2-வதாக இருக்காது. அது 3, 4, 5, 6 என்று இறங்கியபடியேதான் செல்லும். நாங்கள் எங்களுக்கே அந்த அடையாளத்தைக் கொடுத்துக் கொள்ளவில்லை.

    நாங்கள் எப்போதும் அன்றைய தினத்தில் சிறப்பாக ஆடவே முயற்சி செய்கிறோம், அணிகளை வீழ்த்த ஆசைப்படுகிறோம். சில வேளைகளில் நன்றாக ஆடுவோம் சில வேளைகளில் ஆடுவதில்லை, இவையெல்லாம் ஆட்டத்தில் சகஜமே. ஆனால் நன்றாக ஆட வேண்டும் என்பது மனதில் நீங்காமல் ஆணித்தரமாக இருக்க வேண்டும்.” என்றார்.

    சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20-யில் இலங்கை, வங்கதேச அணிகளிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது இந்த ‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி’ என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    பந்தின் தையலை வித்தியாசமாகப் பயன்படுத்திய சிராஜ்!

    October 3, 2025
    விளையாட்டு

    2026 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா, ஜிம்பாப்வே!

    October 3, 2025
    விளையாட்டு

    சிராஜ், பும்ரா அசத்தல் பந்து வீச்சு: மேற்கு இந்தியத் தீவுகள் 162 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

    October 3, 2025
    விளையாட்டு

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: சத்தீஸ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு அணி

    October 3, 2025
    விளையாட்டு

    ‘நான் வரேன்’ – இந்திய பயணத்தை உறுதி செய்த மெஸ்ஸி!

    October 2, 2025
    விளையாட்டு

    ‘பாக். அணியுடன் கைகுலுக்கல் இல்லை’ – இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பின்தொடரும் மகளிர் அணி | Women’s WC

    October 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரவே கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க பாஜக கூறுகிறது’ – சீமான்
    • கடந்த 100 ஆண்டுகளில் வாழ்வதற்கான ரகசியம்: உங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கக்கூடிய ஆச்சரியமான ஆளுமைப் பண்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 50 ஆண்டுகளில் முதல் முறையாக மனிதர்களை சந்திரனுக்கு கொண்டு செல்வதற்கான வரலாற்று பணிக்கு நாசா தயாராகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி; தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டங்களுக்கு தடை
    • தினசரி தேநீர் அல்லது காபி தலை மற்றும் கழுத்து புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடும்: உங்கள் காலை கஷாயத்தின் ஆச்சரியமான நன்மைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.