Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி
    விளையாட்டு

    அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லண்டன்: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

    வியாழக்கிழமை (ஜூன் 12) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் கனவுகள் கருகி உள்ளன.

    இந்த விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். உலக தலைவர்களில் டொனல்டு ட்ரம்ப், புதின், ஷெபாஸ் ஷெரீப், ஸ்டார்மர் என பலர் தங்களது வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், லண்டன் நகரின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 282 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டி வருகிறது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட வான் சூழல் விலகி வெயிலின் தாக்கம் லேசாக தற்போது லண்டனில் உணரப்படுகின்ற காரணத்தால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் பவுலர் ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதே போல இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் அங்கு பயிற்சிக்காக முகாமிட்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர்களும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பெக்கன்ஹாமில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!

    September 16, 2025
    விளையாட்டு

    கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!

    September 16, 2025
    விளையாட்டு

    சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!

    September 16, 2025
    விளையாட்டு

    ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்

    September 16, 2025
    விளையாட்டு

    120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் – இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!

    September 15, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி
    • கொசுக்கள் மற்றும் ஈக்களைத் தக்கவைக்க சூழல் நட்பு வழிகள்: இயற்கை விரட்டிகள், தாவரங்கள் மற்றும் அலங்கார உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கூட்டாட்சிக்கு எதிராக இந்தியை திணிக்கும் முயற்சி: அமித் ஷாவுக்கு தவெக கண்டனம்
    • டம்பிள் ட்ரையர், ரேடியேட்டர்கள் அல்லது டிஹைமிடிஃபையர் இல்லாமல் வீட்டிற்குள் வேகமாக துணிகளை எப்படி உலர்த்துவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.