Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் முதன் முறையாக தகுதி
    விளையாட்டு

    ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் முதன் முறையாக தகுதி

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் முதன் முறையாக தகுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சியோல்: உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள் முதன்முறையாக ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளன. அதேவேளையில் தென் கொரியா 11-வது முறையாக தொடர்ச்சியாக பங்கேற்க உள்ளது.

    ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன.

    இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் – உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

    இதன் மூலம் இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ள நிலையில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது உஸ்பெகிஸ்தான். அந்த அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

    இதே பிரிவில் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் அணிகள் தகுதி சுற்றின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஜோர்டான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வீழ்த்தி முதன் முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது.

    ‘சி’ பிரிவில் ஜகாத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா 0-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் சீனா, 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 18 அணிகள் மோதின. இதில் தற்போது தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஏற்கெனவே ஈரான், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றிருந்தன.

    தகுதி சுற்று 3-வது கட்டத்தில் அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா அணிகளில் ஏதேனும் ஒன்று தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

    3-வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் 3 பிரிவுகளிலும் 3 மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் 6 அணிகள் 4-வது கட்ட தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.

    இந்த 6 அணிகளம் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இந்த இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறும். அதேவேளையில் இரு பிரிவிலும் 2-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 5-வது கட்ட தகுதி சுற்றில் 2 முறை நேருக்கு நேர் மோதும்.

    இதில் வெற்றி பெறும் அணி ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, ஒசியானா கால்பந்து கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு அணிகள் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த 2 அணிகள் ஆகியவற்றுடன் இணைந்து கண்டங்களுக்கு இடையிலான பிளேஆஃப் சுற்றில் விளையாடும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ரிஷப் பந்த் காயத்துடன் போராடி அரை சதம் விளாசல்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

    July 25, 2025
    விளையாட்டு

    WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்!

    July 25, 2025
    விளையாட்டு

    டெஸ்ட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய அன்ஷுல் காம்போஜ்: டக்கெட்டை 94 ரன்களில் வெளியேற்றினார்!

    July 24, 2025
    விளையாட்டு

    வாஷிங்டன் சுந்தருக்கு முன்பு ஷர்துலை இறக்குவதா? – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

    July 24, 2025
    விளையாட்டு

    எலும்பு முறிவால் ரிஷப் பந்த் விலகல்: இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு

    July 24, 2025
    விளையாட்டு

    ரிட்டயர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வருவாரா?

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
    • பள்ளி மாணவர்கள் கணினி, ஏஐ பயில ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • இயற்கையாகவே கல்லீரலை குணப்படுத்த ஆயுர்வேத பழக்கம்
    • அனில் அம்பானி குழுமத்தில் சோதனை: ரூ.3,000 கோடி மோசடி புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை
    • ரஷ்யாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்ததில் 49 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.