Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஃபர்ஹான், ராவுஃப் மீது பிசிசிஐ புகார்; சூரியகுமார் மீது பாக். கிரிகெட் வாரியம் புகார்
    விளையாட்டு

    ஃபர்ஹான், ராவுஃப் மீது பிசிசிஐ புகார்; சூரியகுமார் மீது பாக். கிரிகெட் வாரியம் புகார்

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஃபர்ஹான், ராவுஃப் மீது பிசிசிஐ புகார்; சூரியகுமார் மீது பாக். கிரிகெட் வாரியம் புகார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராவுஃப் மற்றும் சஹிப்சதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அதிகாரபூர்வமாகப் புகார் எழுப்பியுள்ளது. அதே போல் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது பிசிபியும் அதிகாரபூர்வ புகார் எழுப்பியுள்ளது.

    கடந்த ஞாயிறன்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிராகக் களத்தில் இவர்களது செய்கை மற்றும் செயல்பாடுகள் மீது பிசிசிஐ புகார் எழுப்பியுள்ளது. புதன் கிழமையன்று மின்னஞ்சலில் ஐசிசிக்கு இந்தப் புகார் அனுப்பப்பட்டதாகவும் ஐசிசி அதைப் பெற்று விட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    ஃபர்ஹானும், ராவுஃபும் எழுத்து மூலமாக குற்றச்சாட்டுகளை மறுத்தால் ஐசிசி விசாரணை நடத்தும். இவர்கள் ஆட்ட நடுவர் டேவ் ரிச்சர்ட்சன் முன்னிலையில் ஆஜராக வேண்டும். இன்னொரு ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டும் உடனிருப்பார்.

    அன்றைய தினம் ஃபர்ஹான் தன் அரைசதத்தை எடுத்து முடித்தவுடன் ரசிகர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போல் மட்டையைப் பயன்படுத்திய செய்கையும், ராவுஃப் ரசிகர்களிடத்தில் மேற்கொண்ட செய்கையும் இப்போது புகாருக்கு இடமளித்த விவகாரங்களாகும். இவர்களது செயல்கள் சமூக ஊடகங்கள் முழுதும் வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்தன.

    இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் டென் டஸ்ஷாதே கூறும்போது, “சூழ்நிலை காரணமாக வீரர்கள் மீது ஏற்றப்படும் அழுத்தம் ஒரு பெரிய பிரச்சினை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடத்தையைக் கட்டுப்படுத்துவது கடினம். ஹாரிஸ் செய்த சிலபல செய்கைகளை நானும் பார்த்தேன், அது என் கவலையில்லை. நான் ஏற்கெனவே கூறியது போல் இந்திய வீரர்கள் எப்படித் தங்களை நடத்திக் கொண்டனர் என்பதில் பெருமை அடைகிறோம்.” என்றார்.

    அதே போல் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது வெற்றியை பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறிய சூரியகுமார் யாதவ், இந்திய ராணுவத்தின் தீரத்தையும் புகழ்ந்து பேசினார்.

    இப்போது சூரியகுமார் யாதவ்வின் அத்தகைய பேச்சு ‘அரசியல்’ நோக்கம் கொண்டது என்று புகார் எழுப்பியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    பயிற்சியாளரின் பணி திறமையை வளர்ப்பதா அழிப்பதா?- கம்பீர் செய்வது என்ன?

    September 25, 2025
    விளையாட்டு

    கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் தோல்வி

    September 25, 2025
    விளையாட்டு

    யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    September 25, 2025
    விளையாட்டு

    சிட்னி தண்டரில் அஸ்வின்!

    September 25, 2025
    விளையாட்டு

    கே.எல்.ராகுல், நித்திஷ்குமார் ரெட்டி ஏமாற்றம்: இந்தியா ‘ஏ’ 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

    September 25, 2025
    விளையாட்டு

    ஹாக்கி இந்தியா லீக் 7-வது சீசன்: லியாம் ஹென்டர்சன் ரூ.42 லட்சத்துக்கு ஏலம்

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வழக்கமான உடற்பயிற்சி ஒற்றைத் தலைவலியின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைக்கிறது; நிபுணர் கூறுகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பால்டிக் கடலுக்கு அடியில் மர்மம்: படிக்கட்டு போன்ற அம்சங்களுடன் 200-அடி அமைப்பு நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எலோன் மஸ்கின் ஆழ்ந்த ஒப்புதல் வாக்குமூலம்: ‘சில நேரங்களில் நான் மிகவும் முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்கிறேன், மக்கள் ஆழமானவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள், சில சமயங்களில்…’ | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதில் ஆந்திரா முதலிடம்
    • அமெரிக்க விசா விவகாரம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.