Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு
    வணிகம்

    111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: தமிழக அரசு சார்பில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தொழிலாளர் தங்கும் விடுதிக்கு தொழில் நிறுவனத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறைகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது ‘சிட்கோ’ தொழிற்பேட்டை வளாகம். தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன்பெற உதவும் வகையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சமீபத்தில் இந்த விடுதி திறக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.23.05 கோடி செலவில் 1.49 ஏக்கர் நிலத்தில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் 66 அறைகள், ‘பி’ பிரிவில் 45 அறைகள் என மொத்தம் 111 அறைகள் உள்ளன. 528 தொழிலாளர்கள் தங்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், தொழிலாளர்கள் குடும்பத் துடன் தங்கும் அறைகளும் உள்ளன. 4 பேர் தங்குவதற்கு ரூ.8,000, 6 பேர் தங்கும் அறைக்கு ரூ.12,000 மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் மட்டும் தங்கும் வகையிலான அறைகளில் எட்டு பேர் தங்க ரூ.12,000 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மின்தூக்கிகள், விளையாட்டுத் திடல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்ட நிலையில் அறைகளை முன்பதிவு செய்யும் பணிகளை தொழில்துறையினர் தொடங்கியு ள்ளனர்.

    இதுகுறித்து ‘சிட்கோ’ மேலாளர் சண்முக வடிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதிக்கு தொழில் நிறுவனத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் தினமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் பதிவு தொடங்கி சில நாட்களில் 13 அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனத்தினர் அறைகளை விரைவில் பயன்படுத்திக் கொள்ள உத்தரவாதம் அளித்து சென்றுள்ளனர்.

    தற்போது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுற்றுப்புற பகுதிகளில் வாடகை குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கெனவே செலுத்தப்பட்ட வைப்பு தொகை பெறுதல், முறைப்படி அறிவிப்பு கொடுத்த அறை மற்றும் குடியிருப்புகளை காலி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக தொழில் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

    தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி தொழிலாளர்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு ள்ளது என்று அவர் தெரிவித்தார். கோவை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை நிறுவன உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் (கொசிமா) முன்னாள் தலைவர் சுருளிவேல் கூறும்போது, “இந்த விடுதி தொழிலாளர்களுக்கு மிகவும் பயன் தரும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    மீன் வளர்ப்பில் சத்தீஸ்கரின் பெண்கள் குழு: ஆண்டுதோறும் 15 டன் உற்பத்தி, பல லட்சம் லாபம்

    September 21, 2025
    வணிகம்

    ரயில் நிலையங்களில் விற்கப்படும் ‘ரயில் நீர்’ விலை குறைப்பு

    September 21, 2025
    வணிகம்

    எச்1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: விமான நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

    September 21, 2025
    வணிகம்

    ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு!

    September 20, 2025
    வணிகம்

    இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: விரைவில் அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்

    September 20, 2025
    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் உச்சம்: பவுனுக்கு ரூ.480 உயர்வு!

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக ஆர்ஜேடி மீது பாஜக மீண்டும் குற்றச்சாட்டு
    • அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ்
    • லாப்ரடோர் ரெட்ரீவர் நாய்க்குட்டியைப் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • 21 செப்டம்பர் 2025 அன்று பகுதி சூரிய கிரகணம்: உலகளாவிய தெரிவுநிலை, அத்தியாவசிய செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, நேரங்கள் மற்றும் ‘சூர்யா கிரஹானை’ பாதுகாப்பாக எவ்வாறு கவனிப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது: நயினார் நாகேந்திரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.