Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, உயிரி உரங்கள்: கோத்தாரி நிறுவனம் அறிமுகம்
    வணிகம்

    விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, உயிரி உரங்கள்: கோத்தாரி நிறுவனம் அறிமுகம்

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, உயிரி உரங்கள்: கோத்தாரி நிறுவனம் அறிமுகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள் மற்றும் உயிரி உரங்களை கோத்தாரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    வேளாண் துறையில் பாரம்பரிய நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்து மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள், உயிரி-உரங்கள் மற்றும் திரவ உரங்களை தயாரித்துள்ளது.

    இதன் அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜே.ரபீக் அகமது, நிர்வாக துணை தலைவர் கார்த்திகேயன், ஆலோசகர் ஜெயந்த் முரளி ஆகியோர் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர்.

    மேலும், ட்ரோன் சாதனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்க விவசாயிகள் பதிவு செய்வதற்கான பிரத்யேக செயலியையும் (Tech Kothari), ஹெல்ப்லைன் வசதியையும் (9095290953) அறிமுகம் செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் ரபீக் அகமது கூறியதாவது: கோத்தாரி நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்து வருகிறது. தற்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் 35 புதிய மருந்துகள், உயிரி உரங்கள், திரவநிலை மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். முக்கிய அம்சமாக ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்துகளை தெளிக்க பிரத்யேக செயலி மற்றும் ஹெல்ப்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர்களுக்கு மருத்து தெளிக்க அரை நாட்கள் ஆகிவிடும். ஆனால், ட்ரோன்கள் மூலம் ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.500 கட்டணத்தில் 10 நிமிடத்தில் மருந்துகளை தெளித்து முடித்துவிடலாம். விவசாயிகள் எங்களுக்கு தகவல் தெரிவித்தால் ட்ரோன் சாதனம், மருந்துகள், ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய வாகனம் உடனடியாக வந்துவிடும்.

    மதுரையில் எங்களின் ட்ரோன் தயாரிப்பு மற்றும் பைலட் பயிற்சி நிறுவனம் இய.ங்கி வருகிறது. இதன்மூலம் தேவையான ட்ரோன் பைலட்கள் உருவாக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குறைந்த செலவில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்துகள் தெளிக்கும் எங்களின் இந்த புதிய முயற்சி வேளாண் துறையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். வரும் காலத்தில் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சலுகைகளால் ஜவுளி தொழில் துறையினரை ஈர்க்கும் ஒடிசா – தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

    July 29, 2025
    வணிகம்

    புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்

    July 29, 2025
    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    வணிகம்

    அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    July 28, 2025
    வணிகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

    July 28, 2025
    வணிகம்

    பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்: பொதுப் பிரிவுக்கு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது
    • இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    • தமிழக தேர்தல் களம் 2026-ல் என்ன செய்யப் போகிறது ‘ஏஐ’ புயல்? – ஓர் அலர்ட் பார்வை
    • இந்த மழைக்காலத்தை வீட்டில் கொத்தமல்லி வளர்க்க 6 எளிதான உதவிக்குறிப்புகள்: வளர்ந்து வரும் தனியா தாவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.