Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»வரலாற்றில் முதன்முறை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி
    வணிகம்

    வரலாற்றில் முதன்முறை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

    adminBy adminSeptember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வரலாற்றில் முதன்முறை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தங்கம் விலை இன்று (செப்.5) ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தைக் கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இது அத்தியாவசியத் தேவைக்காக நகை வாங்குவோரை மட்டுமின்றி ஆடம்பரத்துக்காக நகை வாங்குவோரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 138 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,38,000-க்கும் விற்பனை ஆகிறது.

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    மேலும், அமெரிக்காவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இந்தியாவில் தங்கம் விலை உயர்வதற்கு இன்னொரு காரணம். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 10 முதல் 15 சதவீதம் வரை தங்கம் விலை உயரும் என்றும் கூறப்படுகிறது.

    ஆடம்பரப் பொருள் என்பதைத் தாண்டி பாதுகாப்பான முதலீடு என்பதாலும் அதன் மீதான முதலீடு உலகம் முழுவதுமே பரவலாக இருக்கிறது. அதுவும் இந்தியாவில் தங்கம் வைத்திருப்பது அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் பொருளாகவும் உள்ளது.

    2025 ஜனவரி 1-ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.57,200-க்கு விற்பனையானது நினைவுகூரத்தக்கது. கடந்த 8 மாதங்களில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.22,840 வரை உயர்வைக் கண்டுள்ளது.

    தங்கம் இப்போது வாங்கலாமா? தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் இருந்தாலும், நீண்ட கால முதலீட்டை விரும்புபவர்கள் தங்கம் வாங்கலாம். அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான அடித்தளத்தை அமைக்கும். ஆனால், மற்றவர்கள் தங்கம் விலை குறையும்போது நகை வாங்குவது லாபகரமானது என நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

    September 6, 2025
    வணிகம்

    ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

    September 6, 2025
    வணிகம்

    பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

    September 6, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

    September 5, 2025
    வணிகம்

    GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

    September 5, 2025
    வணிகம்

    இந்திய ஜவுளித் துறை இனி..? – ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘எஃப் 1’ ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித்: நரேன் கார்த்திகேயன்
    • காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பெண்ணின் தந்தை உட்பட மூவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
    • அரிசி சாப்பிடுவது உங்களை சோம்பலாக ஆக்குகிறது: உணவுக்கு பிந்தைய தூக்கத்தின் பின்னால் உள்ள உண்மையான அறிவியல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நம்பமுடியாத கண்டுபிடிப்பு: ராணி எறும்புகள் இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் சந்ததியினரை உருவாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிபர் ட்ரம்ப் விதித்த 50% வரி குறுகிய காலம்​தான் நீடிக்​கும்: பொருளா​தார ஆலோ​சகர் கருத்து 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.