Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, January 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?
    வணிகம்

    ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜூலை 1 முதல் ரயில் கட்டணம், தட்கல் டிக்கெட் முன்பதிவு, ஆதார் – பான் இணைப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது

    பான் – ஆதார் இணைப்பு: ஜூலை 1 (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்க தவறினால், ஏற்கனவே உள்ள பான் எண் செயலிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    இதுவரை புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது.

    தட்கல் டிக்கெட் முன்பதிவு: தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக, 2.5 கோடி போலி கணக்குகளை அண்மையில் கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது. தட்கல் டிக்கெட்களை மக்கள் எளிதாகப் பெறும் வகையில் விரைவில் ஆதார் அங்கீகார முறை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதன்மூலம், பயணிகள் எளிதாக தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும், இந்தப்பணியை சிஆர்ஐஎஸ் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி நாளை முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் வரும் ஜூலை 15 முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும், இரண்டு காரணி அங்கீகாரம் ( two-factor authentication) அவசியம். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச் சொல் அனுப்பப்படும்.

    ரயில் கட்டண உயர்வு: இன்னொரு புறம், நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களுக்கு) எந்த மாற்றமும் இல்லை. சாதாரண ஏசி அல்லாத வகுப்புகளுக்கு (புறநகர் அல்லாத பிற ரயில்கள்): இரண்டாம் வகுப்பு – ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா அதிகரிப்பு. (நிபந்தனைக்கு உட்பட்டது)

    மேலும் வாசிக்க > பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: 2025-26 நிதிஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆக இருந்த நிலையில் தற்போது இது செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு தணிக்கை அல்லாத வரி செலுத்துவோருக்கு (பெரும்பாலான சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள்) மட்டுமே பொருந்தும். ஆனால் இறுதி வரி அல்லது சுய மதிப்பீட்டு வரி போன்ற நிலுவையில் உள்ள எந்தவொரு வரிகளையும் ஜூலை 31, 2025-க்கு முன்பே செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு இந்த வரிகளைச் செலுத்துவோர், செப்டம்பர் 15, 2025-க்குள் வருமானத்தை தாக்கல் செய்தாலும், வட்டி மற்றும் அபராதம் போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

    December 3, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

    December 3, 2025
    வணிகம்

    பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

    December 3, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

    December 3, 2025
    வணிகம்

    இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில்

    December 3, 2025
    வணிகம்

    உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை எப்படி அடைவது மற்றும் ஏன் இந்த கடற்கரை ஜோதிர்லிங்கத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்கிரிப்டை புரட்டுதல்: புதிய ஆய்வு, பெண்களை விட ஆண்கள் ‘காதல்’ அதிகம், உணர்ச்சிப் பாதுகாப்புக்காக ஏங்குகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘துல்ஹன் கி பெஹன்’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கான புதிய ஆடைக் குறியீட்டை கிருதி சனோன் அமைத்துள்ளார்
    • இந்த செடி பாம்புகளை கவரும்! உங்கள் தோட்டத்தில் நடுவதை தவிர்க்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சீனப் பெண் விபத்தில் ஒரு மூட்டு மற்றும் கையை இழந்து 3 மாரடைப்புகளில் இருந்து உயிர் பிழைத்தார்; தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இப்போது சிறப்புத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்தும் வணிகத்தை நடத்துகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.