இந்த உயர்மட்ட மாநாடு தமிழகம் மற்றும் சாக்சனி இடையிலான தொழில் துறை, புதுமை, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் எம்எஸ்எம்இ கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு நடைபெற்றது.
ஜெர்மனியைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். மாநாட்டில் தமிழக அரசு செயலர் அதுல் ஆனந்த் பேசும்போது, “மரபுசாரா எரிசக்தி, காற்றாலை மின்சாரம், உள்ளிட்ட வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழகத்தில் தொழில் துறைக்கு வானமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

