Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘முள் சீத்தா’வில் புதிய முயற்சி: டிப் டீ, மிட்டாய், பவுடர் தயாரித்து அசத்தும் தம்பதி!
    வணிகம்

    ‘முள் சீத்தா’வில் புதிய முயற்சி: டிப் டீ, மிட்டாய், பவுடர் தயாரித்து அசத்தும் தம்பதி!

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘முள் சீத்தா’வில் புதிய முயற்சி: டிப் டீ, மிட்டாய், பவுடர் தயாரித்து அசத்தும் தம்பதி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய தம்பதி, பழநி அருகே பாப்பம்பட்டியில் இயற்கை விவசாய முறையில் முள் சீத்தா பழம் சாகுபடி செய்து, அதிலிருந்து டிப் டீ, பவுடர், மிட்டாய் என மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து அசத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் துரை பாண்டி. இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மனைவி கோமதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அருப்புக்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதால், தண்ணீர் வசதி உள்ள ஒரு ஊரில் தோட்டத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அருப்புக்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதால், தண்ணீர் வசதி உள்ள ஒரு ஊரில் தோட்டத்தை விலைக்கு வாங்கி விவலயம் செய்யத் திட்டமிட்டனர்

    அதன்படி, பழநி அருகேயுள்ள பாப்பம்பட்டியில் தென்னந்தோப்பை விலைக்கு வாங்கினர். என்ன பயிரிடலாம் என்ற யோசனையில் இருந்தபோது புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் முள் சீத்தாப் பழத்துக்கு இருப்பதை அறிந்து கொண்டனர்.

    பின்னர், தேனி மற்றும் ஆந்திராவில் இருந்து முள் சீத்தாப் பழக்கன்றுகளை வரவழைத்து, தோட்டத்தில் நடவு செய்தனர். நடவு செய்த நாள் முதல் தற்போது வரை ஒரு துளிக்கூட ரசாயனம், பூச்சிக் கொல்லி பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அறுவடை செய்த முள் சீத்தாப் பழங்களை விற்பனை செய்தது போக, மீதமுள்ள பழங்கள் வீணாகாமல் தடுக்க அந்த பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து, அதிலும் லாபம் பார்த்து வருகின்றனர். அதாவது, பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கி சூரிய ஒளி கூடார உலர்த்தியில், நன்கு உலர வைத்து, வெந்நீர் அல்லது பாலுடன் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் தயார் செய்கின்றனர். இதேபோல், நன்கு உலர வைத்த பழங்களை அரைத்து, ஜாம், மிட்டாய் தயாரிக்கின்றனர். இது மட்டுமின்றி, முள் சீத்தாப் பழ இலைகளை சூரிய ஒளி கூடார உலர்த்தியில் உலர்த்தி, டிப் டீயும் தயாரிக்கின்றனர். இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

    இதுகுறித்து துரைபாண்டி, கோமதி ஆகியோர் கூறியதாவது: சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா என்று கூறுவதுபோல், சொந்த ஊருக்கே திரும்பி வந்து விவசாயம் மேற்கொள்ள விரும்பினோம். ஆனால், சொந்த ஊரில் தண்ணீர் பிரச்சினை என்பதால், நாங்கள் விரும்பியது போலவே பழநியில் தோட்டம் விலைக்கு வாங்கினோம். விவசாயம் சார்ந்த தேடலின் போது, முள் சீத்தாப் பழத்தின் நன்மையும், அதற்கு இருக்கும் மவுசு குறித்தும் அறிந்து கொண்டோம். 2019-ல் முள் சீத்தாப் பழக்கன்றுகளை நடவு செய்தோம். 2022 முதல் நல்ல மகசூல் கிடைத்து வருகிறது. நவம்பர் மாதம் பூக்க தொடங்கி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்கள் மகசூல் கிடைக்கும்.

    அதேபோல், ஏப்ரல் மாதம் பூக்கத் தொடங்கி மே, ஜூனில் மகசூல் கிடைக்கும். ஒரு பழம் குறைந்தது 800 கிராம் முதல் 2 கிலோ வரை எடை இருக்கும். முள் சீத்தாப் பழம் எளிதாக கிடைத்து விடாது. அதனால் எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய திட்டமிட்டோம். தற்போது, பழம் மற்றும் இலையில் இருந்து பவுடர், பழத்தில் இருந்து மிட்டாய், இலையில் இருந்து டிப் டீ தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். முள் சீத்தாவால் பலனடைந்தவர்கள் தேடி வந்து எங்களிடம் வாங்கி செல்கின்றனர். நஞ்சில்லா காய்கறிகளை தேடி ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இயற்கை விவசாயம் மூலம் முள் சீத்தாப் பழத்தை சாகுபடி செய்து கொடுப்பதால் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் இருக்கிறோம். என்று கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியது!

    September 1, 2025
    வணிகம்

    சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்!

    September 1, 2025
    வணிகம்

    5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம்

    September 1, 2025
    வணிகம்

    எத்தனால் கலப்பு எரிபொருள் மைலேஜை பாதிக்கும்: வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

    September 1, 2025
    வணிகம்

    இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள்

    September 1, 2025
    வணிகம்

    ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ‘ஏதர் இஎல்-01’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பூண்டு ஆரோக்கிய நன்மைகள்: கல்லீரல் செயல்பாடு முதல் கொழுப்பு வரை: பூண்டு உட்கொள்ள 5 காரணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு
    • யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
    • ஆப்டிகல் மாயை: 6 கள் கடலில் மறைக்கப்பட்ட எண் 9 ஐ வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.