Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»முதல்வர் யோகி அரசின் சுற்றுச்சூழல் கொள்கையின் தாக்கம்: உ.பி.யில் மின் வாகன விற்பனை அதிகம்
    வணிகம்

    முதல்வர் யோகி அரசின் சுற்றுச்சூழல் கொள்கையின் தாக்கம்: உ.பி.யில் மின் வாகன விற்பனை அதிகம்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் யோகி அரசின் சுற்றுச்சூழல் கொள்கையின் தாக்கம்: உ.பி.யில் மின் வாகன விற்பனை அதிகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இதுவரை 4.14 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மின் ரிக்ஷா, சிறிய மற்றும் பெரிய கார்கள் அடங்கும். இது நாட்டின் பிற மாநிலங்களைவிட அதிகம் ஆகும். தலைநகர் டெல்லியில் 1.83 லட்சம் மின்சார வாகனங்களும், மகாராஷ்டிராவில் 1.79 லட்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    உத்தர பிரதேசத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்திருப்பதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மின்சார வாகனக் கொள்கைதான் காரணம் என கூறப்படுகிறது.

    உத்தர பிரதேச அரசு ‘புதிய மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கையை’ 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் மாநிலத்தை மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியின் மையமாக மாற்றவும், ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 10 லட்சம் வேலைகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவித்தல், சார்ஜிங் நிலையங்களை அதிகரித்தல் மற்றும் மின்சார வாகனங்களை வாங்க பொதுமக்களை ஊக்குவித்தல் ஆகிய மூன்று முக்கிய உத்திகளை உ.பி. அரசு வகுத்துள்ளது. அயோத்தி, வாராணசி, மதுரா, பிரயாக்ராஜ், நொய்டா, காஜியாபாத், லக்னோ மற்றும் கான்பூர் போன்ற நகரங்களில் இயங்கும் மின்-ரிக்ஷாக்கள் மட்டும் மின்சார வாகன சந்தையில் 85% பங்கு வகிக்கின்றன. இந்த வாகனங்கள் மாசு இல்லாதவை மட்டுமல்ல, ஏழை மக்களை சுயசார்புடையவர்களாக மாறவும் உதவுகின்றன.

    இம் மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் அதற்கான சார்ஜிங் நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 16 நகராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய சார்ஜிங் நிலையங்களை உருவாக்க அரசு முடிவு செய்தது. இவற்றில் பெரும்பாலானவை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அதிக நடமாட்டம் உள்ள அயோத்தியில் அமைக்கப்படுகின்றன.

    2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்திய அரசின் FAME (விரைவான மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல்) திட்டத்தின் கீழ் உ.பி. மிகப்பெரிய பயனாளியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இது தேவையை அதிகரித்துள்ளது.

    எனினும், சிறிய, பெரிய மின்சார கார் கார்கள் விற்பனையில் மகராஷ்டிரா (90,870) முதலிடம் பிடித்துள்ளது. உ.பி.யில் 66,913, டெல்லியில் 22,960, கர்நாடகாவில் 55,823 மற்றும் தமிழ்நாட்டில் 44.909, மின் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்
    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்
    • இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.