இந்த செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என வாஷிங்டன் போஸ்ட் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, விரிவான ஆய்வுக்குப் பிறகு சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதித்துறை அல்லது வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை.

