Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும்: அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை
    வணிகம்

    மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும்: அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும்: அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: ஏற்கெனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என, தமிழக அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: “தற்போது அமலில் உள்ள மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே நெருக்கடியில் உள்ளன. தவிர மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உள்நாடு மற்றும் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது. அமெரிக்க அரசு மாற்றியமைத்துள்ள புதிய வரி விதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தமிழக அரசு இவ்வாண்டு மின்கட்டணத்தை உயர்த்தினால் நிதி நெருக்கடி அதிகமாகும். இதனால் உற்பத்தி குறைந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். பல நிறுவனங்கள் மூடப்படவும் வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும் போது,“விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் ஜவுளித்தொழில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களால் நெருக்கடியில் உள்ளன. குறிப்பாக கழிவுபஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் நூற்பாலைகளில் தமிழக அரசு ஏற்கெனவே அமல்படுத்தியுள்ள மின்கட்டண உயர்வால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இவ்வாண்டு தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. இல்லையெனில் பலர் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை ஏற்படும்” என்றார்.

    தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின் ‘டான்சியா’ துணை தலைவர் சுருளிவேல் மற்றும் ‘டாக்ட்’ கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: “கடந்த 2022-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஏற்று மின்சார வாரியம் குறு, சிறு தொழில்முனைவோர் பயன்படுத்தும் மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. குறிப்பாக நிலை கட்டணத்தை 2022-ம் ஆண்டு 430 சதவீதம் உயர்த்தியது. இதனால் உற்பத்தி செலவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தி வருவதால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாண்டு உயர்த்தப்பட உள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்யவும், ஏற்கெனேவ உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    ‘காட்மா’ தலைவர் சிவக்குமார் கூறும் போது, “தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் தொழில்துறையினர் உள்நாட்டில் மற்ற மாநிலங்களுடன் கூட போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இவ்வாண்டு மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ள நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்
    • நாய்கள் மற்றும் பூனைகள்: எது புத்திசாலி? பதில் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    • புல் மீது வெறுங்காலுடன் நடப்பதன் 7 நன்மைகள்
    • பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.