Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»மத்திய அரசின் இஎல்ஐ திட்டம்: முதல் முறை பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகை
    வணிகம்

    மத்திய அரசின் இஎல்ஐ திட்டம்: முதல் முறை பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகை

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய அரசின் இஎல்ஐ திட்டம்: முதல் முறை பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மத்திய அரசின் இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இந்தியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கியது. முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டமானது 2 பகுதிகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதல் பகுதியில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்கள் அங்கு ஓர் ஆண்டு வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு 2 தவணையாக ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் முதல் தவணையாக 6 மாதங்களில் ரூ.7,500-ம், இரண்டாம் தவணையாக 12 மாதங்களில் அடுத்த ரூ.7,500-ம் வழங்கப்படும். இவை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதிய தொழிலாளர்களை நிறுவனத்தில் இணைக்கும்போது நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அதன்படி ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ரூ.1000-ம், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூ.2 ஆயிரமும், ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் வரை நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    2025 ஆகஸ்டு 1-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் இத்திட்டம் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடையும். உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தால் அமைப்பு சாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஓலா, ஊபர் கட்டண உயர்வு அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற கோரிக்கை

    July 5, 2025
    வணிகம்

    அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி சம்பாதித்தது எப்படி?

    July 5, 2025
    வணிகம்

    பத்திரப் பதிவுக்கு ஜூலை 7-ல் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்கல்!

    July 4, 2025
    வணிகம்

    சென்னை துறைமுக வடக்கு பகுதியில் ரூ.8,000 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டம்

    July 4, 2025
    வணிகம்

    சீன பொறியாளர்கள் திரும்ப பெறப்பட்டதால் பாக்ஸ்கானில் ஐ-போன் உற்பத்தி பாதிப்பு

    July 4, 2025
    வணிகம்

    ஜூன் மாதத்தில் சிறப்பாக வளர்ச்சி கண்ட சேவைகள் துறை

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • அமெரிக்காவின் சிறந்த மருத்துவர் பொதுவான பழக்கவழக்கங்களை எச்சரிக்கிறார், அவை அமைதியாக குடலுக்கு தீங்கு விளைவிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்: இபிஎஸ் அறிவிப்பு
    • புற்றுநோய்க்கு பிந்தைய உடற்பயிற்சி திட்டம் மரணம் மற்றும் மறுநிகழ்வு விகிதங்களைக் குறைக்கிறது, ஒரு ஆய்வின்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளி அடக்கம் தவறானது: 166 பேரின் எச்சங்கள் மற்றும் கஞ்சா விதைகள் பசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளாகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.