Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகள் விற்பனை
    வணிகம்

    மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகள் விற்பனை

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகள் விற்பனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி விநாயகர் சதூர்த்தி தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், 3 அல்லது 5 தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

    இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட, ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல்’ கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே, பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    இதனால், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கான ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்க்கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்து கின்றனர்.

    தற்போது மதுரையில் பஞ்சகவ்யம் மூலம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பஞ்சகவ்யம் என்பது பசுமாட்டின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய 5 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இயற்கை கலவையாகும். இது விவசாயத்தில் உரமாக மட்டுமல்லாது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலையால் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாமலும், நல்ல உரமாகவும் பயன்படுகிறது.

    இதுகுறித்து, மதுரை ஒத்தக்கடையில் வசிக்கும் மந்தையம்மன் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பூர்ணிமா தேவி கூறுகையில், பஞ்சகவ்யத் தில் விளக்கு, விநாயகர் சிலை, முகப்பூச்சு பவுடர் ஆகியவற்றை செய்து விற்பனை செய்து வருகிறோம். பஞ்சகவ்ய விளக்கு 108 ஹோமப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. விளக்குத் திரி பஞ்சகவ்ய கரைசல் கொண்டு செய்யப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் முதன்முறையாக பஞ்சகவ்யத்தில் விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகிறோம். மகளிர் திட்டம் மூலம் நடைபெறும் கண்காட்சிகளில் இச்சிலைகள் விற்பனை செய்து வருகிறோம். விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான எண்ணெய், பன்னீர், சந்தணம், குங்குமம் உள்ளிட்ட 15 பொருட்கள் ரூ.499-க்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறோம். மேலும், தனியாக ‘பரிபூர்ணா பெண்கள் உலகம்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன். அதன் மூலமாகவும் மக்கள் தொடர்பு கொண்டு இந்த பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர், என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு

    August 18, 2025
    வணிகம்

    சென்செக்ஸ் 1,000+ புள்ளிகள் உயர்வு: ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை

    August 18, 2025
    வணிகம்

    உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

    August 18, 2025
    வணிகம்

    பெங்களூருவில் தோசை சுடும் ரோபோவை கண்டுபிடித்த பொறியாளர்!

    August 18, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை

    August 17, 2025
    வணிகம்

    யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்!

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு
    • ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ – திருமாவளவன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
    • நிக் உடனான தனது நிச்சயதார்த்தத்தை ஓலண்ட்ரியா உறுதிப்படுத்தியதா? லவ் ஐலேண்ட் யுஎஸ்ஏ சீசன் 7 ஸ்டாரின் டிக்டோக் கருத்து மீண்டும் ஒன்றிணைவதற்கு முன்னதாக வதந்திகளைத் தூண்டுகிறது
    • ‘கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்’ – ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த ‘செக்’… அடுத்தது என்ன?
    • தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.