Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம்
    வணிகம்

    பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 6.2% ஆகவும், 2026-ம் ஆண்டில் 6.3% ஆகவும் வளரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

    இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) கணித்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் ஏப்ரல் 2025 பதிப்பின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 6.2 சதவீதமாகவும், 2026-ம் ஆண்டில் 6.3 சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய சூழலில் உறுதியான நிலையாகும்.

    உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வலுவாகவே உள்ளது. இந்த நிலைத்தன்மை, இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளின் வலிமையை மட்டுமல்லாமல், சிக்கலான சர்வதேச சூழலில் வேகத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் திறனையும் குறிக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை சர்வதேச செலாவணி நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக நாட்டின் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது.

    உலகப் பொருளாதார ஆய்வறிக்கை என்பது உலகளாவிய பொருளாதார போக்குகள் மற்றும் கொள்கை சவால்கள் குறித்த சர்வதேச செலாவணி நிதியத்தின் முக்கிய அறிக்கையாகும். இடைக்கால புதுப்பிப்புகளுடன் ஆண்டுக்கு இரண்டு முறை இது வெளியிடப்படுகிறது. இது வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களை உள்ளடக்கிய கணிப்புகளை வழங்குகிறது.

    ஏப்ரல் 2025 வெளியீட்டில், இந்தியாவைப் பொறுத்தவரை, வளர்ச்சிக் கண்ணோட்டம் ஒப்பீட்டளவில் மிகவும் நிலையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் இந்திய பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சியைக் கணித்துள்ளது.

    சர்வதேச செலாவணி நிதியம் மற்ற முக்கிய உலகளாவிய பொருளாதாரங்களுக்கான வளர்ச்சி மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு 4.0 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இது உலக பொருளாதார கண்ணோட்டத்தின் ஜனவரி 2025 பதிப்பில் 4.6 சதவீதமாக இருந்தது. இதேபோல், அமெரிக்காவின் வளர்ச்சி 90 அடிப்படை புள்ளிகள் குறைந்து 1.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளை பொறுத்த வரை இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியா வலுவான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.