Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»பீடா பிரியர்களுக்காக வட மாநிலங்களுக்கு செல்லும் சின்னமனூர் வெற்றிலை!
    வணிகம்

    பீடா பிரியர்களுக்காக வட மாநிலங்களுக்கு செல்லும் சின்னமனூர் வெற்றிலை!

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பீடா பிரியர்களுக்காக வட மாநிலங்களுக்கு செல்லும் சின்னமனூர் வெற்றிலை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சின்னமனூர்: தேனி மாவட்டம் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை, வேம்பரளி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், சைடு பறி, முதியால் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த வெற்றிலை வகைகள் சின்னமனூர், பெரியகுளம், தேனி சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    அங்கு ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு அடுக்கப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்து பாண்டிச்சேரி, மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கொல்கத்தா, பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரும்புச் சத்து உள்ள இந்த வெற்றிலை செரிமானத்துக்கு உதவும் மருத்துவக் குணம் கொண்டது.

    கடந்த தலைமுறையினருக்கு வெற்றிலை மெல்லும் பழக்கம் இயல்பாகவே இருந்தது. இதனால் நோய், நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால், காலப்போக்கில் இப்பழக்கம் குறையத் தொடங்கியது. தேவை வெகுவாக குறைந்ததால் வெற்றிலை விவசாயத்தில் சரிவு ஏற்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த விவசாயம் தற்போது 20 ஏக்கர் அளவுக்கு சுருங்கி விட்டது. இதனால் எந்த ரகத்துக்கு தேவை அதிகம் உள்ளதோ, அதை மட்டும் தேர்வு செய்து பயிரிட்டு வருகின்றனர். இருப்பினும் திருவிழா, விசேஷ நிகழ்ச்சிகள் போன்றவை வெற்றிலைக்கு வெகுவாக கைகொடுத்து வருகிறது.

    வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக

    பார்சல் செய்யப்படும் வெற்றிலை.

    மேலும் கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பீடா பயன்பாடு அதிகம் உள்ளது. அதற்காக இங்கிருந்து அதிகளவில் வெற்றிலை அங்கு சந்தைப்படுத்தப்படுகிறது. இதற்காக சக்கை, திடமான மார் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இவை திருச்சி, தருமபுரி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு மொத்தமாக அனுப்பப்படுகின்றன.

    வெற்றிலையின் நேரடிப் பயன்பாடு குறைந்ததால், இவற்றை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றி விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெற்றிலை ஜூஸ், வெற்றிலை சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

    பழனிவேல்

    இதுகுறித்து சின்னமனூர் விவசாயி பழனிவேல் கூறுகையில், கம்பம் பள்ளத்தாக்கில் முன்பு ஆண்டு முழுவதும் வேளாண் பணிகள் நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு வெற்றிலை பழக்கம் இருந்ததால் இதன் விற்பனையும் அதிகம் இருக்கும். ஆனால், தற்போதைய நிலை மாறிவிட்டது. பீடா போடும் பழக்கம் வெளிமாநிலத்தில் இருப்பதால் வெற்றிலைக்கு ஓரளவு விலை கிடைத்து வருகிறது என்று கூறினார்.

    தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் இவற்றை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி அதிகளவில் சந்தைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றிலையின் பாரம்பரியத்தை தக்கவைக்க முடியும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்

    July 29, 2025
    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    வணிகம்

    அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    July 28, 2025
    வணிகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

    July 28, 2025
    வணிகம்

    பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்

    July 28, 2025
    வணிகம்

    திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை: அன்புமணி
    • உயர் யூரிக் அமில அளவு: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அவற்றைக் குறைக்க இயற்கை வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் மரணத்தை மூளை ஸ்கேன் கணிக்க முடியுமா? விஞ்ஞானிகள் இது சாத்தியம் என்று கூறுகிறார்கள், மேலும் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய நோய்களைக் கூட சுட்டிக்காட்டுகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறுகிறது: தாய்லாந்து ராணுவம் குற்றச்சாட்டு
    • கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஓபிஎஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.