புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடகங்களுக்கான விளம்பரக் கட்டணங்களை 27% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “பாரம்பரிய ஊடகங்களில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் பணிபுரிவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் பல சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

