Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை
    வணிகம்

    பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை

    adminBy adminMay 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது

    சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்காக $1 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை (EFF) மதிப்பாய்வு செய்து, புதிய $1.3 பில்லியன் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (RSF) கடன் திட்டத்தை வெள்ளிக்கிழமை பரிசீலித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினரான இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதுடன் வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது.

    கடந்த 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தான் தொடர்ந்து நம்பியிருப்பதையும், நிலையான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த அந்நாடு தவறியதையும் காரணம் காட்டி, பாகிஸ்தானில் சர்வதேச நாணய நிதிய திட்டங்களின் செயல்திறனை இந்தியா கேள்வி எழுப்பியது.

    மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பாகிஸ்தானுக்கு நான்கு தனித்தனி ஐஎம்எஃப் திட்டங்கள் வகுக்கப்பட்டத்தையும் அவற்றில் உள்ள குறைபாடுகள், மோசமான கண்காணிப்பு அல்லது பாகிஸ்தான் அரசு வேண்டுமென்றே ஒத்துழைக்காதது போன்றவற்றை இந்தியா சுட்டிக்காட்டியது.

    பொருளாதார விவகாரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆழமான தலையீடு, கொள்கை சறுக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்களை தலைகீழாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும் ஒரு சிவில் அரசாங்கம் இப்போது ஆட்சியில் இருந்தாலும் கூட, ராணுவம் உள்நாட்டு அரசியலில் தொடர்ந்து ஒரு பெரிய பங்கை வகிக்கிறது என்றும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

    இதுபோன்ற தொடர்ச்சியான நிதியுதவிகள் பாகிஸ்தானை பெரிய கடனாளியாக மாற்றும் அபாயம் இருப்பதாகவும், இது உலகளாவிய விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. மிக முக்கியமாக, ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ சர்வதேச நாணய நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

    July 27, 2025
    வணிகம்

    இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்: ஜவுளித் தொழில்துறையினர் நம்பிக்கை

    July 27, 2025
    வணிகம்

    ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல்

    July 27, 2025
    வணிகம்

    2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி

    July 27, 2025
    வணிகம்

    மாற்றம் தரும் இங்கிலாந்துடனான ஒப்பந்தம்: வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

    July 27, 2025
    வணிகம்

    தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘நாசா தாக்குதலுக்கு உள்ளாகிறது’: பாரிய நாசா பணிநீக்கங்கள் டொனால்ட் டிரம்பின் நிதி வெட்டுக்களுக்கு மத்தியில் 20% ஊழியர்களைக் காண்க; நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆசிய கோப்பையில் பாக். உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும்: முன்னாள் ஆர்சிபி வீரர்
    • மீண்டும் இணையும் ‘கூலி’ கூட்டணி!
    • ‘என் வீட்டுக்கே ரூ.12,000 பில்’ – இபிஎஸ் குற்றச்சாட்டும், அமைச்சர் சிவசங்கர் பதிலும்
    • தீர்ந்த சிக்கல்கள் – ‘அடங்காதே’ 8 ஆண்டுக்குப் பின் ஆக.27-ல் ரிலீஸ்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.