சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 4-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் ரூ.9,795-க்கும், ஒரு பவுன் ரூ.78,360-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.70, பவுனுக்கு ரூ.560 அதிகரித்தது. இதனால், 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,865-க்கும், ஒரு பவுன் ரூ.78,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,761, ஒரு பவுன் ரூ.86,088 என்ற அளவில் இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.136-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது.
இதுகுறித்து தங்கம், வைர நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் டாலர் மதிப்பு, தங்கம் விலை உயர்ந்திருப்பதால் உள்நாட்டி
லும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை உயரவே வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.