
நாகப்பட்டினம்: நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி, சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற் கொள்ளப்பட்டது.
நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், வடகிழக்கு பருவமழை பெய்து பல இடங்களில் வயலில் தேங்கிய மழைநீரில் சாய்ந்து மூழ்கியதால் பெருமளவில் நெல்மணிகள் முளைவிட்டும், பயிர்கள் அழுகியும் பாதிக்கப்பட்டது.

