Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»நாட்டிலேயே முதல் முறையாக மும்பை – பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் வசதி
    வணிகம்

    நாட்டிலேயே முதல் முறையாக மும்பை – பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் வசதி

    adminBy adminApril 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டிலேயே முதல் முறையாக மும்பை – பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் வசதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

    பயணிகள் கட்டணத்தைத் தவிர இதர வகைகளில் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை (என்ஐஎன்எப்ஆர்ஐஎஸ்) இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை மண்டல அளவில் அதன் ரயில்வே மேலாளர்களே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி, மும்பை-மன்மட் பஞ்சவதி விரைவு ரயிலில் உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது புசவால் ரயில்வே மண்டலம் மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ரயிலில் பொருத்தப்பட்ட முதல் ஏடிஎம் ஆகும். ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதும் இந்த ஏடிஎம்மிலிருந்து பயணிகள் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஏடிஎம் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பொருத்தப்பட்டிருந்தாலும், அனைத்து பயணிகளும் அதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இந்த ஏடிஎம் மூலம் காசோலை மற்றும் கணக்கு விவர அறிக்கைகளை கோரி விண்ணப்பிக்கவும் முடியும். பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து ஏடிஎம் வசதி பிற ரயில்களிலும் ஏற்படுத்தித் தரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு
    • விஞ்ஞானத்தின் ஆதரவுடன், இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தக்கூடிய 5 சிறிய பழக்கவழக்கங்கள்
    • தேர்தல் பிரச்சாரத்துக்கு 68,000 டிஜிட்டல் நிர்வாகிகள்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்
    • தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை பெய்ய வாய்ப்பு
    • முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: நீர்வரத்து 80,984 கனஅடியாக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.