Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் ரூ.56 ஆயிரம் கோடி உதவி: நபார்டு வங்கி தகவல்
    வணிகம்

    நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் ரூ.56 ஆயிரம் கோடி உதவி: நபார்டு வங்கி தகவல்

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் ரூ.56 ஆயிரம் கோடி உதவி: நபார்டு வங்கி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) 44-வது நிறுவன நாள் விழா சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து, நபார்டு வங்கியின் 2025-26-ம் நிதியாண்டுக்கான அலகு செலவு கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து ‘நேப்சுவடு’ எனப்படும் விவசாயப் பொருட்களை கண்டறியும் செயலியையும் அறிமுகம் செய்துவைத்தார்.

    பின்னர் அவர் பேசும்போது, “மீன்வளம், கால்நடை, நீர்வளம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கான பட்ஜெட்டை திட்டமிடும்போது, அதில் ஒரு முக்கிய நிதி ஆதாரமாக நபார்டு வங்கி இருக்கிறது. நபார்டு வங்கியின் மூலம் கடந்த நிதியாண்டில் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டிருக் கிறது. கிராமப்புற கடனுதவிக்கான இலக்காக நபார்டு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.8.34 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு ரூ.9 லட்சமாக அது அதிகரிக்கப்பட் டுள்ளது.

    மின்னணு பொருட்களின் உற்பத்தியை நாம் அதிகரித்து வருவதால், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங், பிராண்டிங், விளம்பரம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் பல்வேறு உதவிகளை செய்துவரும் நபார்டின் பணி சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

    தொடர்ந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் பேசுகையில், “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள திட்டங்களை கொண்டு வருவது விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முக்கியம். அந்த வகையில் நபார்டு வங்கியுடன் இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

    முன்னதாக நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் ஆர்.ஆனந்த் பேசும்போது, “நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை நபார்டு வங்கி பட்டுவாடா செய்திருக்கிறது. அதேபோல் இதுவரை ஊரக கட்டமைப்புகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடியை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது.

    இதன்மூலம் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம் வருகிறது. இதுமட்டுமின்றி இந்த ஆண்டு 5200 கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் பொதுமேலாளர்கள் ஹரி கிருஷ்ணராஜ், எஸ்.எஸ்.வசீகரன், ரிசர்வ் வங்கியின் மண்டல பொது மேலாளர் வி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

    August 25, 2025
    வணிகம்

    ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

    August 25, 2025
    வணிகம்

    ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

    August 25, 2025
    வணிகம்

    ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு

    August 24, 2025
    வணிகம்

    உடல் பருமனை குறைப்பதாக விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

    August 24, 2025
    வணிகம்

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இதய நோய்: முன்னணி இருதய அறுவை சிகிச்சை நிபுணர் இதய நோய்க்கு பின்னால் 3 அமைதியான கொலையாளிகளை வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரதட்சணை கேட்டு கணவன் சித்ரவதை: மகனின் கண்முன்னே மனைவிக்கு தீ வைப்பு
    • இங்கிலாந்தில் இருந்து வந்த மேக்கப் சாதனங்கள்! – சந்திரகுப்த சாணக்கியா (அல்லது) தறுதலை தங்கவேலு
    • பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவர் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.1 கோடி வழங்க வேண்டும்: மருத்துவர்கள் கோரிக்கை
    • 15 அன்றாட உணவுகள் நீங்கள் தவறான வழியில் சாப்பிடுகிறீர்கள்: இங்கே அதை எப்படி சரியாக செய்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.