Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு – ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?
    வணிகம்

    தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு – ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?

    adminBy adminJuly 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு – ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தொழில் ரீதியாக 10 போட்டி மாநிலங்களில் தமிழ்நாட்டை விட மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்களில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி, கட்டணத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் அமைப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் தொழில் போட்டியாக கருதப்படும் 10 மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

    இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்தில் தொழில்துறைக்கு மின் கட்டணம் குறைவு என தமிழக மின் வாரியம் தெரிவிக்கிறது. ஆனால் போட்டி மாநிலங்களில் தொழில் தொடங்க நிலம், நிதி, வட்டி மானியம் மட்டும் அளிக்கவில்லை. குறைவான மின் கட்டணத்தை வழங்கி ஊக்குவிக்கின்றனர்.

    இதுவரை தமிழகத்திற்கு மூலப்பொருட்களை அதிகளவு வழங்கி வந்த மாநிலங்களில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருவதுடன் அம்மாநில முதல்வர்கள் நேரில் தமிழகம் வந்து தொழில் துறையினருக்கு அழைப்பு விடுப்பதால் கடந்த 5 ஆண்டு காலமாக ஜவுளி, பொறியியல் துறை ஆர்டர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் அடக்க விலைகளை விட 10 சதவீதம் முதல் 18 சதவீதம் குறைவாக வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்குள் இறக்குமதி ஆகி வருவதால் நீண்ட அனுபவம் உள்ள தமிழக உற்பத்தியாளர்கள் நலிவடைந்து வருகின்றனர்.

    தற்போது தமிழக உற்பத்தி துறையினரின் எண்ணிக்கையை விட சேவை துறையின் எண்ணிக்கை மூன்று மடங்காக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு பின் 5 ஆண்டு காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என கூறி 2022-ம் ஆண்டு மின் கட்டணத்தையும், இதர துணை கட்டணங்களையும் அபரிதமாக தமிழக மின்சார வாரியம் உயர்த்தியது.

    இதன் அடிப்படையில் நான்கு வருட காலமாக, 2022-ல் 52.6 சதவீதம், 2023-ல் 2.18 சதவீதம், 2024-ல் 4.83 சதவீதம், 2025-ல் 3.16 சதவீதம் என மொத்தம் 62.77 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை விட, இதர கட்டண உயர்வு தொழில் துறையை கடுமையாக நலிவடைய செய்துள்ளது. எச்டி நுகர்வோருக்கு டிமாண்ட் சார்ஜ் (நிலை கட்டணம் ) ஒரு கிலோ வாட் ரூ.350 என இருந்தது, ரூ.550 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 4 வருடத்தில் மேலும் 58 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.608 என ஒரு கிலோ வாட்டுக்கு உயர்த்தி உள்ளனர்.

    உதாரணத்துக்கு, 500 கிலோ வாட் வாங்கி இருந்தால் 500×550 = ரூ.3,04,000 ஒரு மாதத்திற்கு தினமும் நிறுவனங்களை இயக்கினாலும், இயக்காவிட்டாலும் ரூ.10,133 செலுத்த வேண்டும். அதேபோல எல்டிசிடி தாழ்வழுத்த மின்சாரத்தை பெற்ற குறு, சிறு தொழில்முனைவோருக்கு 2021-ம் ஆண்டு வரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35 செலுத்தப்பட்டு வந்ததை 2022-ம் ஆண்டில் 428 சதவீதம் உயர்த்தி ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.150 என உயர்த்தினர். தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் முன்பு 2021-ம் ஆண்டு வரை 112 கிலோ வாட்டுக்கு ரூ.3,920 செலுத்தினால் போதும். 2025-ம் ஆண்டு முதல் ரூ.18,480 (471 சதவீதம்) கட்டாயம் செலுத்த வேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளில் பயன்படுத்திய மின் கட்டணம் போக, நிலைக் கட்டணத்தையும் சேர்த்து மாத மாதம் ரூ.18,480 கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டதால் குறு, சிறு நிறுவனங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிட இயலவில்லை. 112 கிலோ வாட்டுக்கு மேல் 150 கிலோ வாட் வரை வாங்கிய நுகர்வோர் 2022-க்கு பின் எச்டி இணைப்புக்கு இணையாக நிலைக் கட்டணம் மற்றும் உச்ச பயன்பாட்டு நேர (பீக் ஹவர்) கட்டணம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.608 செலுத்துகின்றனர்.

    112 கிலோ வாட் வாங்கி இருந்தால் ரூ.18,480 செலுத்த வேண்டும். அதே 150 கிலோ வாட் வாங்குபவர் மாதா மாதம் பயன்படுத்திய மின் கட்டணம் போக தொழில் நிறுவனங்களை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் ரூ.91,200 நிலைக் கட்டணம் செலுத்த வேண்டும். நாட்டில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கட்டணம் இல்லை.

    மாநில நலன் கருதி வீடு, விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு வருடம் ரூ.16,000 கோடி மானியமாக மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்குகிறது. சூரிய ஒளி ஆற்றல் திட்டங்களை ஊக்குவித்து, பம்ப்செட் மற்றும் விசைத்தறிகளுக்கு அரசு செலவில் மின் உற்பத்திக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நான்கு ஆண்டுகளில் முதலீடு செய்த நிதியை திரும்ப பெற இயலும். மாநில நிதி செலவினங்களை குறைப்பதுடன் மாநில தொழில் வளர்ச்சிக்கும் உதவ முடியும்.

    மின்வாரிய அதிகாரிகள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என தெரிவிக்கின்றனர். ஆனால் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட தொழில்துறைக்கு மின் கட்டணம் குறைவாக உள்ளது. இது நாட்டிலேயே அதிக தொழில் முனைவோர் உள்ள மூன்றாவது மாநிலமாக உள்ள தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த திட்டமிடும் முதல்வரின் கொள்கைக்கு முரணாக உள்ளது.

    எனவே, முதல்வர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின் வாரியத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்கி பிற மாநிலங்களின் மின் கட்டணத்துடன் ஒப்பிட்டு கட்டணத்தை குறைக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

    August 26, 2025
    வணிகம்

    இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    August 25, 2025
    வணிகம்

    தொழில் முனைவோர்களுக்கான 3 நாள் ட்ரோன் பயிற்சி: செப்.9-ல் சென்னையில் தொடக்கம்

    August 25, 2025
    வணிகம்

    கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

    August 25, 2025
    வணிகம்

    ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

    August 25, 2025
    வணிகம்

    ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை – முழு விவரம்
    • சென்னை, திருப்பூரைச் சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
    • தமிழகம் முழுவதும் ரூ.174 கோடியில் 19 புதிய ஐடிஐக்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • மேட்சா பக்க விளைவுகள்: அதிகப்படியான கணக்கீடு கல்லீரல் மற்றும் செரிமானத்தை எவ்வாறு பாதிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருமாவளவன் வெளியிட்ட ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.