Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»தெற்காசிய நீல புரட்சிக்கு வித்திடும் முதல் தானியங்கி ஆழ்கடல் துறைமுகம் ‘விழிஞ்ஞம்’!
    வணிகம்

    தெற்காசிய நீல புரட்சிக்கு வித்திடும் முதல் தானியங்கி ஆழ்கடல் துறைமுகம் ‘விழிஞ்ஞம்’!

    adminBy adminJuly 31, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தெற்காசிய நீல புரட்சிக்கு வித்திடும் முதல் தானியங்கி ஆழ்கடல் துறைமுகம் ‘விழிஞ்ஞம்’!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசியாவின் நீல புரட்சிக்கு வித்திடும் இந்தியாவின் முதல் ஆழ்கடல் தானியங்கி துறைமுகமாக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் முத்திரை பதித்து வருகிறது.

    பன்னாட்டு கடல் மார்க்கத்தில் ஐரோப்பா, பாரசீக வளைகுடா, மற்றும் துபாய், சிங்கப்பூர் போன்ற மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் கடல்சார் மேலாண்மைக்கான இந்திய நுழைவுவாயிலாக உள்ள கேரளாவின் விழிஞ்ஞம் தானியங்கி துறைமுகம் கடந்த மே மாதம் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    உலக வர்த்தகத்தில் இந்திய கடல் பயணத்தில் மகத்தான அத்தியாயத்தை தொடங்கியுள்ள இந்த துறைமுகம் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் புவியியல் ரீதியாக இயற்கையாகவே 18 முதல் 20 மீட்டர் ஆழம் கொண்ட இந்தியாவின் ஆழமான துறைமுகமாக விழிஞ்ஞம் உருவெடுத்துள்ளது.

    இதனால் சுமார் 24 ஆயிரத்து 500 கண்​டெய்​னர்​களை சுலப​மாக ஏற்​றி, இறக்​கிச்​செல்​லும் எம்​எஸ்சி அரினா போன்ற சர்​வ​தேச பிர​மாண்ட சரக்கு கப்​பல்​கள் கூட இங்கு வந்து எளி​தாக சரக்கு போக்​கு​வரத்தை கையாளும் வகை​யில் அனைத்து செயல்​பாடு​களும் தானி​யங்கி முறை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

    கேரள அரசு, மத்​திய அரசு மற்​றும் அதானி குழு​மத்​தின் கூட்டு முயற்​சி​யால் பொது – தனி​யார் கூட்​டாண்மை பங்​களிப்​புடன் சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள இந்த துறை​முகத்​தில் சோதனை முயற்​சி​யாக கடந்த 2024 ஜூலை முதல் தற்​போது வரை 415 சரக்கு கப்​பல்​கள் வந்து சென்​றுள்​ளன.

    முதற்​கட்ட பணி​யில் 10.50 லட்​சம் கண்​டெய்​னர்​களை கையாளும் வகை​யிலும், இரண்​டாவது, மூன்​றாவது மற்​றும் நான்​காவது கட்ட விரி​வாக்​கப் பணி​கள் மூல​மாக சுமார் 45 லட்​சம் கண்​டெய்​னர்​களை கையாள​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

    இயற்கை சீற்​றங்​களில் இருந்து இந்த துறை​முகத்தை பாது​காக்​க​வும், கப்​பல்​கள் எவ்​வித இடையூறும் இல்​லாமல் வந்து செல்ல கடல் நீரோட்​டம் ஆர்ப்​பாட்​ட​மின்றி அமை​தி​யான முறை​யில் இருக்​க​வும் ரூ. ஆயிரத்து 500 கோடி செல​வில் 3 கிமீ தூரத்​துக்கு ஆழ்​கடலின் நடுவே அக்​ரோ​பாட்ஸ் கற்​களு​டன் கூடிய வாட்​டர் பிரேக்​கிங் சிஸ்​டம் எனப்​படும் பிர​மாண்ட அலை​தாங்கி தடுப்​பணை பொறி​யியல் அற்​புத​மாக திகழ்​கிறது.

    சென்னை ஐஐடி-​யுடன் இணைந்து உள்​நாட்​டிலேயே உரு​வாக்​கப்​பட்ட அதிநவீன தானி​யங்கி கப்​பல் கிரேன்​கள், தானி​யங்கி யார்டு கிரேன்​கள், செயற்கை நுண்​ணறி​வுடன் கூடிய விடிஎம்​எஸ் (வெஸ்​ஸல் டிராபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்​டம்) தொழில்​நுட்​பத்​தால் இந்த துறை​முகத்​தின் ஒட்​டுமொத்த மேலாண்மை மற்​றும் இயக்​கப்​பணி​களும் மைய அலு​வல​கத்​தின் கண்​ணாடி கூண்​டு​களுக்​குள் இருக்​கும் அதானி குழும ஊழியர்​களால் கணினி வழி​யாக கண்​காணிக்​கப்​பட்​டு, லாவக​மாக இயக்​கப்​படு​கிறது. இதனால் ஒன்​றரை நிமிடங்​களுக்​குள் ஒரு கண்​டெய்​னர் யார்​டில் இறக்​கவோ, ஏற்​றவோ செய்​யப்​படு​கிறது.

    இந்​தி​யா​வுக்கே முன்​னோடி​யாக விளங்​கும் இந்த சர்​வ​தேச துறை​முகத்​தின் சிறப்​பம்​சங்​கள் குறித்து அதானி குழும அதி​காரி​கள் கூறுகை​யில், “கடல், ஆகா​யம் மற்​றும் சாலை மார்க்​கத்​தில் சரக்கு கண்​டெய்​னர் போக்​கு​வரத்தை எளிமை​யாக தானி​யங்கி முறை​யில் கையாளும் வகை​யில் இந்த துறை​முகம் நாட்​டுக்கே முன்​னோடி​யாக தனது பணியை தொடங்கி செய​லாற்றி வரு​கிறது. அந்த வகை​யில் திரு​வனந்​த​புரம் சர்​வ​தேச விமான நிலை​யம் இந்த துறை​முகத்​தில் இருந்து 16 கிமீ தொலை​வில் உள்​ளது.

    ஒரு கிமீ தூரத்​தில் தேசிய நெடுஞ்​சாலை உள்​ளது. இத்​துறை​முகத்​தில் இருந்து 10 கிமீ தூரத்​துக்கு பலராமபுரம் வரை திரு​வனந்​த​புரம் – கன்​னி​யாகுமரி ரயில் வழித்​தடத்தை இணைக்​கும் வகை​யில் சுரங்க ரயில் வழித்​தடம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் தற்​போது ஓராண்​டுக்கு சராசரி​யாக சுமார் 50 முதல் 60 லட்​சம் கண்​டெய்​னர்​கள் கப்​பல்​களில் பரி​மாற்​றம் செய்​யப்​படு​கிறது. இதில் சுமார் 75 சதவீத பரி​மாற்​றம் கொழும்​பு, துபாய், சிங்​கப்​பூர் போன்ற பிராந்​திய வெளி​நாட்டு துறை​முகங்​கள் மூல​மாக நடை​பெற்று வரும் நிலை​யில் இந்​தி​யா​வின் உள்​நாட்டு சரக்கு பரி​மாற்​றத்​துக்கு விழிஞ்​ஞம் துறை​முகம் சிறந்த தீர்​வு. கடல்​சார் உள்​நாட்டு வணி​கம், வேலை​வாய்ப்​பு, சுற்​றுலா போன்​றவை பன்​மடங்​காக பெரு​கும்.

    கண்​டெய்​னர் கையாளுதல் கட்​ட​ண​மும் 200 முதல் 300 டாலர் வரை கணிச​மாக குறை​யும். பன்​னோக்கு திட, திரவ கப்​பல் தளம், அதிநவீன தொழில்​நுட்​பம், பசுமை சூழல், ஆழ்​கடல் கழிவு மேலாண்​மை, குறை​வான கார்​பன் உமிழ்​வு, பதுங்குகுழிகள், குடோன்​கள் என நிலை​யான உள்​கட்​டமைப்பை இத்​துறை​முகம் பெற்​றுள்​ளது.

    வெளி​நாட்டு துறை​முகங்​கள் பாரம்​பரிய​மாக ஆதிக்​கம் செலுத்​தும் ஜேட் மற்​றும் டிராகன் சேவை வழித்​தடத்​தில் விழிஞ்​ஞ​மும் இணைக்​கப்​பட்டு இருப்​பது மற்​றொரு சிறப்​பு. இதன்​மூலம் சர்​வ​தேச பன்​னோக்கு சரக்கு கப்​பல் போக்​கு​வரத்​தால் தெற்​காசிய நீல புரட்​சிக்கு வித்​திடும் இந்​தி​யா​வி்ன் முதல் தானி​யங்கி கிரேன் துறை​முகம் என்ற பெரு​மையை இத்​துறை​முகம் பெற்​றுள்​ளது.

    இன்​னும் 10 ஆண்​டு​களில் இந்​தியா 10 லட்​சம் கோடி டாலர் என்ற மிகப்​பெரிய கடல்​​சார் பொருளா​தார இலக்கை எட்ட விழிஞ்​ஞ​மும் தனது பங்​களிப்பை வழங்​கும்’’ என்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    இந்தியாவில் ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவையின் ஸ்பீடு, கட்டண விவரம்!

    July 30, 2025
    வணிகம்

    12,000 ஊழியரை நீக்க டிசிஎஸ் முடிவு: பேச்சுவார்த்தையில் மத்திய அரசு

    July 30, 2025
    வணிகம்

    ஊராட்சி பகுதியில் தொழில் தொடங்க உரிம கட்டணம் மாற்றியமைப்பு

    July 30, 2025
    வணிகம்

    சலுகைகளால் ஜவுளி தொழில் துறையினரை ஈர்க்கும் ஒடிசா – தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

    July 29, 2025
    வணிகம்

    புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்

    July 29, 2025
    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விவரிப்பு
    • உங்கள் பழைய பூனை ஏன் யூலிங்கை நிறுத்தாது, அதைப் பற்றி நீங்கள் என்ன செய்ய முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தாராபுரத்தில் கொலையான வழக்கறிஞர் உடலை பெற 3-ம் நாளாக உறவினர்கள் மறுப்பு
    • கவனத்தை திருடும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லிகள் வளர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்டாலினுடன் சந்திப்புகள், தவெக ஆப்ஷன்… – பாஜகவை ‘ஒதுக்கிய’ ஓபிஎஸ் இனி..?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.