Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு
    வணிகம்

    தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சாதகமான வானிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிவடைய தொடங்கியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்தது. இதன் காரணமாக உப்பளங்களை சீரமைக்கும் பணிகளை உற்பத்தியாளர்கள் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தான் தொடங்கினர். சீரமைப்பு பணிகள் முடிந்து உப்பு வாறும் பணிகள் தொடங்கிய நிலையில், மழை குறுக்கீடு காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு மே 15-ம் தேதி வரை மழை குறுகிட்டதால் உப்பு உற்பத்தி சரியாக நடைபெறவில்லை. இதனால் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு குஜராத் மாநிலத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரீ புளோ உப்பு தயாரிப்பாளர்கள் சுமார் 2 லட்சம் டன் உப்பை குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்தனர்.

    மே 15-ம் தேதிக்கு பிறகு உப்பு உற்பத்திக்கு சாதகமான வானிலை ஏற்பட்டது. தென்மேற்கு பருவக்காற்று வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியது. இதனால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

    15 சதவீத உற்பத்தி: இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: இந்த ஆண்டு மழை காரணமாக மே 15-ம் தேதி வரை உப்பு உற்பத்தி சரிவர நடைபெறவில்லை. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 50 சதவீதம் உப்பு உற்பத்தியாகி இருக்கும்.

    தற்போது வெறும் 15 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தியாகி இருக்கிறது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் இன்னும் பாக்கியுள்ளன. எந்தவித தடங்கலும் ஏற்படாவிட்டால் இன்னும் 50 சதவீதம் வரை உப்பு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இது வரும் காலத்தில் நிலவும் வானிலையை பொறுத்தே உள்ளது.

    விலை சரிவு: இந்த ஆண்டு தென்மேற்கு பருவக் காற்று முன் கூட்டியே தொடங்கியுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வெயில் அடித்து வருகிறது. உப்பு உற்பத்திக்கு சாதகமான நிலை இருப்பதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைய தொடங்கியுள்ளது. முன்பு ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை விலை போன ஒரு டன் உப்பு தற்போது ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை தான் விலை போகிறது.

    குஜராத் உப்பு வருகைக்கும் விலை குறைவுக்கும் தொடர்பில்லை. உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே விலை குறைந்துள்ளது. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

    August 23, 2025
    வணிகம்

    புதுவையில் புதிய வகை விநாயகர் சிலைகள் – ஆர்டர்கள் குறைவால் கவலை!

    August 22, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி வரியில் 12, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை

    August 22, 2025
    வணிகம்

    ஏர் இந்​தி​யா, ஏஐ எக்​ஸ்​பிரஸ் இழப்பு ரூ.9,568 கோடி

    August 22, 2025
    வணிகம்

    முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்: எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தகவல்

    August 22, 2025
    வணிகம்

    மாநில ஜிஎஸ்டி பிரச்சினைக்கு தீர்வு காண 43 நிறுவனங்கள் முதல்வருக்கு மனு: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி 

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் தக்காளி செடிகள் பூக்கும் என்பதற்கான 10 காரணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
    • காலை உணவைத் தவிர்ப்பது டீன் உடல்நலம் மற்றும் பல் சுகாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்? 
    • பரமக்குடி அருகே சகோதரிகளான 2 சிறுமிகள் மின்னல் பாய்ந்து உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.