Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»திருச்சி – பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு!
    வணிகம்

    திருச்சி – பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு!

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்சி – பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: திருச்சி – பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடி மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    திருச்சியில் காந்தி மார்கெட், கீழரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிற்கும் சரக்கு வாகனங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதகமாக திருச்சி பஞ்சப்பூரில் 38 ஏக்கர் பரப்பளவில் 246 கனரக வாகனங்கள் நிறுத்தும் வகையில் ரூ.128.94 கோடி மதிப்பீட்டில் கனரக சரக்கு வாகன முனையம் கட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்று பணிகள் தொடங்கியது.

    பணிகள் நிறைவுற்று பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, போக்குவரத்து முனைய மாதிரியை பார்வையிட்டார். முன்னதாக முனைய வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் பிரம்மாண்ட முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். சிலை அருகே வைக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், எம்பி சிவா, அரசு செயலர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் சிவராசு, ஆட்சியர் மா.பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ஆகியோருடன் அண்ணா சிலை முன்பு குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    என்னென்ன வசதிகள்: கனரக வாகனங்களை இயக்குபவர்களுக்கு 80 அலுவல் பணிக்கான கடைகள், 107 கண்காணிப்பு கேமிராக்கள், 2 எல்இடி அறிவிப்புப் பலகைகள், வாகனங்களுக்கான மின்னணு கட்டண வசதி, 148 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துமிடம், 56 ஒப்பனை அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஒப்பனை அறைகள் மற்றும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    கனரக வாகன ஓட்டுநர்களுக்கான தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 208 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக 29 ஒப்பனை அறைகள் கொண்ட சுகாதார வளாகம் ஒன்று தனியாக கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் 87 தனியார் ஆம்னி பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்துகள் நிறுத்துமிடமும் அமைகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

    December 3, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

    December 3, 2025
    வணிகம்

    பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

    December 3, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

    December 3, 2025
    வணிகம்

    இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில்

    December 3, 2025
    வணிகம்

    உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ள முறையாகும்; இல்லை அது சோப்பு நீர் அல்ல! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த அரிய இமயமலைப் பூ நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – புனிதமான பிரம்ம கமலத்தை வீட்டில் வளர்க்கலாமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சேலை-குறியிடப்பட்ட ஆடையா? டெய்னா டெய்லரின் கோல்டன் குளோப்ஸ் தோற்றம் தேசி ஃபேஷன் விவாதத்தைத் தூண்டுகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ISRO’s PSLV-C62 mission: Anvesha உளவு செயற்கைக்கோள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய உண்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சஞ்சீவ் கபூர் காதல் கதை: பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூர் தனது மனைவி அலியோனா கபூரை ரயில் பயணத்தில் சந்தித்தது எப்படி: அவர்களின் காதல் கதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.