Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்
    வணிகம்

    தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விருதுநகர்: நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீமயமாக்கும் திட்டம் இன்று (ஜூன் 17) தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக இத்திட்டம் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில அளவை மற்றும் நிலவரித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (நக்‌ஷா) திட்டம் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவங்கை மாவட்டம்- காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாநகராட்சி 7 வார்டுகள், விருதுநகர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை நில அளவை ஆவணங்களும், நகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இணைய வழியில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்துக்கான அளவுகள் மற்றும் பரப்புகளை அமைவிடப் புள்ளி விவரங்களுடன் மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.10.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் தொடக்க விழா விருதுநகரில் இன்று நடைபெற்றது. கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நவீன ட்ரோன் மூலம் நகர நில அளவைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் 13.85 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 49,886 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    1.67 கோடி இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சுமார் 41.7 லட்சம் இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை இயக்குநர் மதுசூதணன் ரெட்டி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

    August 26, 2025
    வணிகம்

    இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    August 25, 2025
    வணிகம்

    தொழில் முனைவோர்களுக்கான 3 நாள் ட்ரோன் பயிற்சி: செப்.9-ல் சென்னையில் தொடக்கம்

    August 25, 2025
    வணிகம்

    கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

    August 25, 2025
    வணிகம்

    ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

    August 25, 2025
    வணிகம்

    ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வைக்கம் விருதுக்கு செப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்
    • 10-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
    • சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி
    • நரம்புகள் முதல் பிடிப்புகள் வரை, கால்கள் வெளிப்படுத்தக்கூடிய 5 சுகாதார நிலைமைகள் (அவற்றைப் பற்றி என்ன செய்ய வேண்டும்)
    • கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது அறிவிப்பு: விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.