Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»தமிழகத்தில் பால் கையாளும் திறனை தினமும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
    வணிகம்

    தமிழகத்தில் பால் கையாளும் திறனை தினமும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் பால் கையாளும் திறனை தினமும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சேலம்: தமிழகத்தில் பால் கையாளும் திறனை நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டரிலிருந்து, 70 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    சேலம் ஆவின் பால் பண்ணையில் ரூ.51.62 கோடி செலவில் அமைக்கப்பட்ட நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை, தமிழக முதல்வர் கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலையைப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பார்வையிட்டு, ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் விவசாயிகள் தங்களது மாடுகள் மூலம் சராசரியாகத் தினமும் சராசரியாக 6 முதல் 7 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றனர். இதனை 10 முதல் 12 லிட்டராக உயர்த்திவிட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துவிடும். அதற்கான நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாள்வது குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், உற்பத்தியாளர்களுக்குப் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. முதல்வரிடம் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் பாலின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, தரமான பால் வழங்கக்கூடிய விவசாயிகளுக்குக் கூடுதலாக ரூ.1. வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சேலம் ஆவின் மூலம் கால்நடை வாங்குவதற்குக் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.78 கோடி கடனுதவியும், ரூ.64 கோடி வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. விவசாய மக்களுக்கு லாபத்தில் ஒரு பங்காக, ரூ.6.50 கோடி மற்றும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அளவில் நாள்தோறும் 50 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ள நிலையில், விரைவில் 70 லட்சம் லிட்டராக உயர்த்த பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதை நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் செய்கிறது. ஆவின் என்ற துறை இருப்பதால் மட்டுமே பாலுக்கு நியாயமான விலை கிடைத்து வருகிறது.

    ஆவின் மூலம் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.365 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்படும்.

    அமுலுக்கும் ஆவினுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது கார்ப்பரேட் வகை நிறுவனம், ஆவின் அப்படியல்ல. விவசாயிகளின் நலன், பால் வாங்குவோரின் நலன் பார்க்கப்படுகிறது. ஆவின் கடைகளில் மற்ற பொருள்களை வைத்து விற்பனை செய்வது கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    12,000 ஊழியரை நீக்க டிசிஎஸ் முடிவு: பேச்சுவார்த்தையில் மத்திய அரசு

    July 30, 2025
    வணிகம்

    ஊராட்சி பகுதியில் தொழில் தொடங்க உரிம கட்டணம் மாற்றியமைப்பு

    July 30, 2025
    வணிகம்

    சலுகைகளால் ஜவுளி தொழில் துறையினரை ஈர்க்கும் ஒடிசா – தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

    July 29, 2025
    வணிகம்

    புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்

    July 29, 2025
    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    வணிகம்

    அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
    • அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்: இபிஎஸ்
    • உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இந்த 5 விஷயங்களை படுக்கைக்கு முன் செய்யுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மீண்டும் முதல்வரா அல்லது பாஜக தலைவரா? – மோடி – வசுந்தரா ராஜே சந்திப்பால் சர்ச்சை
    • விரைவில் யூ-டியூபில் வெளியாகிறது ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.