சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண சீசன், அடுத்த நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலமும் வரும் என்பதாலும், சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (செப்.1) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம், ரூ.136-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,36,000-க்கும் விற்பனையாகிறது.