Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம்…’ – லிங்கிடுஇன் பயனரின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் ரியாக்‌ஷனும்
    வணிகம்

    ‘ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம்…’ – லிங்கிடுஇன் பயனரின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் ரியாக்‌ஷனும்

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம்…’ – லிங்கிடுஇன் பயனரின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் ரியாக்‌ஷனும்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜிஎஸ்டி பதிவு செயல்பாடுகளில் லஞ்சக் குற்றச்சாட்டு கூறிய சமூக வலைதள பயனர் ஒருவரின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு நேரடியாக பதில் அளித்துள்ளார்.

    இந்தியாவில் நிதிக் கல்விப்புலத்தில் நன்கு அறிப்படும் வி.ஜி.லெர்னிங் டெஸ்டினேஷனின் நிறுவனரும், இயக்குநருமான வினோத் குப்தா லிங்கிடுஇன்-ல் வெளியிட்ட பதிவு வைரலானதைத் தொடர்ந்து, நிதியமைச்சரின் எதிர்வினை வந்துள்ளது.

    வினோத் குப்தாவும், அவரது மனைவியும் இணைந்து நடத்த விரும்பும் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பித்து 20 நாட்கள் கடந்தும் இன்னும் ஜிஎஸ்டி எண் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், லஞ்சம் கொடுத்தால் எண் விரைவாக கிடைக்கலாம் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதில் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான CBIC-ன் விரிவான பதிலையும் இணைத்துள்ளார்.

    நிதியமைச்சர் பதில்: அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரி செலுத்துவோருக்கு சேவை செய்வது நமது பொறுப்பு. அவ்வாறு செய்யும்போது நாம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அவர்களின் நம்பிக்கையை பெற முடியும். ஜிஎஸ்டி வாரியமும் அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்கும்போது கவனமாகவும் விரைவாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    குப்தா குற்றச்சாட்டு: முன்னதாக, வினோத் குப்தா தனது பதிவில், “நாளை நான் ஒரு குற்றம்புரிய இருக்கிறேன். லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம். எனது மனைவியும் மகளும் கூட்டாளிகளாக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண் பெற 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தேன். ஆட்சேபனைகள் வரத்தொடங்கி உள்ளன. தற்போது வரை, ஜிஎஸ்டி எண் வழங்கப்படவில்லை. அதனால் நான் நாளை ஜிஎஸ்டி எண்ணைப் பெற முடிவு செய்துள்ளேன். அந்தக் குற்றத்தை நான் செய்த பின்பு எனக்கு கட்டாயம் ஜிஎஸ்டி எண் கிடைக்கும் என்பது தெரியும்” என்று தெரிவித்திருந்தார்.

    சிபிஐசி விளக்கம்: இதனிடையே, வினோத் குப்தாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் (CBIC) ஒரு விரிவான விளக்கம் அளித்திருந்தது. அதில், “குப்தாவின் விண்ணப்பம் மே 26-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது டெல்லி ஜிஎஸ்டி அதிகார வரம்புக்குள் உள்ளது. மத்திய ஜிஎஸ்டி அதிகார வரம்புகுள் இல்லை” என்று கூறியிருந்தது.

    மேலும், வாடகை ஒப்பந்தத்தில் பெயர் இல்லாததால் அவரிடம் அது குறித்து கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அதற்கு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்று கூறியிருந்தது.

    மேலும், வினோத்தின் பதிவு வைரலானதைக் கண்டித்திருக்கும் வாரியம், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு
    • ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: கைகள் அல்லது மூளை? நீங்கள் முதலில் பார்ப்பது மிகவும் நம்புகிறீர்கள் அல்லது மற்றவர்களை சந்தேகிக்கிறீர்கள் என்றால் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்
    • “ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.