Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
    வணிகம்

    சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை

    adminBy adminSeptember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில், முதன்​முறை​யாக புதிய மின்​சார ஆட்​டோக்​களை சரக்கு ரயி​லில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சரக்கு பயணம் மூல​மாக ரயில்​வேக்கு ரூ.18.75 லட்​சம் வரு​வாய் கிடைக்​கும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

    தெற்கு ரயில்​வே​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில், சரக்கு ரயில் போக்​கு​வரத்தை மேம்​படுத்த, கடந்த 2020-ம் ஆண்​டுக்கு பிறகு பல்​வேறு முயற்​சிகள் எடுக்​கப்​பட்​டன. குறிப்​பாக, நவீன வசதி​கள் கொண்ட சரக்கு ரயில்​கள் அறி​முகப்​படுத்​தல், சரக்​கு​களை கையாளுவதற்கு ஏற்ற ரயில் நிலை​யத்தை அமைத்​தல், வணிக மேம்​பாட்டு குழு அமைத்​தல் போன்ற நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன.

    இதைத் தொடர்ந்​து, சரக்கு ரயில் போக்​கு​வரத்து வேக​மாக வளரத் தொடங்​கியது. தற்​போது, சென்​னை​யில் இருந்து நாட்​டின் பல நகரங்​களுக்கு சரக்கு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் முதன்​முறை​யாக, புதிய மின்​சார ஆட்​டோக்​களை சரக்கு ரயி​லில் ஏற்றி அனுப்பி சாதனை படைக்​கப்​பட்​டது.

    மான்ட்ரா எலக்ட்​ரிக் (முரு​கப்பா குழு​மம்) நிறு​வனத்​தால் தயாரிக்​கப்​பட்ட மின்​சார ஆட்​டோக்​கள், சரக்கு ரயி​லில் ஏற்றி ஆந்​திரா மாநிலம் தடா ரயில் நிலை​யத்​திலிருந்து, மேற்​கு​வங்​கம் மாநிலம் ரங்​க​பாணிக்கு நேற்று அனுப்பி வைக்​கப்​பட்​டன.

    இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: இதன்​மூலம், சரக்கு வர்த்​தகத்​தில் ஒரு புதிய அத்தியாயத்தை சென்னை ரயில்வே கோட்​டம் தொடங்​கி​யுள்​ளது. மேலும் இது, மின்​சார வாக​னங்​களை பெரிய அளவில் ரயில் மூலம் கொண்டு செல்​வதற்​கான வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​கிறது. ஒவ்​வொரு சரக்கு ரயில் போக்​கு​வரத்​தின் மூல​மும் ரூ.18.75 லட்சம் வரு​வாய் கிடைக்​கும்.

    நடப்பு நிதி​யாண்​டில் 8 சரக்கு ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், ரூ.1.50 கோடி ரயில்​வேக்கு வரு​வாய்கிடைக்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சாலை வழிப் போக்​கு​வரத்​துடன் ஒப்​பிடும் போது, ரயில் மூலம் மின்​சார வாகனங்களைக் கொண்டு செல்​வ​தால், கரியமில வாயு வெளி​யேற்​றத்தை கணிச​மாகக் குறைக்​கிறது. இதன்​மூலம், ரயில்வே நாட்​டின் பசுமைப் போக்​கு​வரத்து சேவை​யாக தனது பங்​கை உறு​தி செய்​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?

    September 17, 2025
    வணிகம்

    50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக டெல்லியில் இந்தியா – அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை

    September 17, 2025
    வணிகம்

    மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது

    September 17, 2025
    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.82,000-ஐ கடந்தது

    September 16, 2025
    வணிகம்

    இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்

    September 16, 2025
    வணிகம்

    உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
    • கொழுப்பு கல்லீரல் வயிற்று வலி மற்றும் வயிற்று வலி: வித்தியாசத்தை எவ்வாறு சொல்வது
    • மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு
    • நவம்பரில் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த அவகாசம்
    • டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.