தொடர் விடுமுறை: செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேர் பயணம் செய்திருந்த நிலையில், அக்டோபரில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, தீபாவளி என தொடர் விடுமுறைகளால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதனால், மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 17-ம் தேதி 4 லட்சத்து 2 ஆயிரத்து 10 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 47 லட்சத்து 59 ஆயிரத்து 171 பேர், பயண அட்டைகளை பயன்படுத்தி 77 ஆயிரத்து 236 பேர், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 44 லட்சத்து 91 ஆயிரத்து 339 பேர் பயணம் செய்துள்ளனர். இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

