Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு
    வணிகம்

    சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதி பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் பல்வேறு நவீன முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி நகர்ப்புற நிதி பத்திரங்கள் மூலம் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 7.97% என நாட்டிலேயே மிக குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.200 கோடிக்கான நகர்ப்புற நிதி பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்த பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்த்தார்.

    இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலர் முருகானந்தம், தேசிய பங்கு சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக், நிதி துறை செயலார் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாக துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்த நிதி பத்திரங்கள் வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, ரூ.100 கோடி அடிப்படை வெளியீட்டு தொகையைவிட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.421 கோடி மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்கு சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டது. இது சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்புக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

    நிதி பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட இந்த நிதி, கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்புக்கு பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ள தடுப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டை நோக்கமாக கொண்ட முக்கியமான உள்கட்டமைப்பு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

    August 27, 2025
    வணிகம்

    அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு சுதந்திரமான வர்த்தகத்துக்கு தடையாக இருக்கும்: ஜெர்மனி துணைத் தூதர் தகவல்

    August 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு!

    August 26, 2025
    வணிகம்

    பிரதமர் மோடி – பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

    August 26, 2025
    வணிகம்

    உரங்கள், அரிய வகை தனிமங்களை சீனா வழங்குவதால் இந்திய வேளாண், ஆட்டோ மொபைல் அபார வளர்ச்சி அடையும்

    August 26, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் வளையத்திற்கான வைரம் இந்தியாவிலிருந்து இருக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பயனர் கூறுகிறார்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்
    • யார் இந்த அபர்ணா சென்? – கமலின் ‘மனம் கவர்ந்த’ வங்க மொழி சினிமா ஆளுமை!
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துரிதமாக செயல்படவில்லை: கே.பாலபாரதி குற்றச்சாட்டு
    • மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்: புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் கண்டறியப்பட்டார்: 5 மிக ஆரம்ப அறிகுறிகள் ஒருவர் தவறவிடக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.