Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூனில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை
    வணிகம்

    சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூனில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூனில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அந்த வகையில் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு, மின்சாரப் பேருந்துகளை ஜூன் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணி களை விரைவுபடுத்துமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், சொகுசு வசதி தேவைப்படுவோருக்கு ஏற்பவும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். மின்சார பேருந்துகள் இயக்கப்படும் பணிமனையில் இருந்து டீசல் பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, இனி வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். இங்குள்ள பேருந்துகளை வெவ்வேறு பணி மனைகளு க்கு பிரித்து வழங்கியுள்ளோம். இது போன்ற ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்.

    போக்குவரத்து ஊழியர்கள் மது அருந்தி பணிக்கு வரக் கூடாது என தொடர்ந்து அறிவுரை வழங்குகிறோம். அவ்வாறு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வில் ‘149’ என்ற புகார் எண்ணை பயணிகள் தொடர்பு கொள்ளலாம். போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    கூடுதல் விலை கொண்ட மின்சார பேருந்துகளை கையாள பணியாளர்கள் இல்லாத காரணத்தால் டெண்டரில் தேர்வான நிறுவனமே பேருந்தை இயக்கும், பராமரிக்கும். இதில் அரசின் நடத்துநர்கள் பணியாற்றுவார்கள். மின்சாரப் பேருந்து வருகையால் டீசல் பேருந்து எண்ணிக்கையை குறைக்கவில்லை. பணியாளர்களையும் குறைக்கவில்லை. தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. மின்சாரப் பேருந்துகளில் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

    August 26, 2025
    வணிகம்

    இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    August 25, 2025
    வணிகம்

    தொழில் முனைவோர்களுக்கான 3 நாள் ட்ரோன் பயிற்சி: செப்.9-ல் சென்னையில் தொடக்கம்

    August 25, 2025
    வணிகம்

    கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

    August 25, 2025
    வணிகம்

    ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

    August 25, 2025
    வணிகம்

    ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஃபேமிலி எண்டர்டெய்னர் படத்தில் விமல்: படப்பிடிப்பு நிறைவு
    • நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தல்
    • ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
    • பெருங்குடல் புற்றுநோய், ஒட்டுண்ணி தொற்று மற்றும் மல சோதனையிலிருந்து அடையாளம் காணக்கூடிய பிற நோய்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி ஆணைகள் வழங்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.