சென்னை: ரிசர்வ் வங்கி அறிவித்த ரெப்போ விகித மாற்றத்தை தொடர்ந்து, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் வைப்புத் தொகை வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, மூத்த குடிமக்களுக்கான வைப்பு தொகைக்கு, 12 மாதங்களுக்கு 7.2%, 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7.5% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல பிற வாடிக்கையாளர்களுக்கான வைப்புத் தொகைக்கு, 12 மாதங்களுக்கு 6.7%, 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், டிஜிட்டல் வைப்புத் தொகை வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது, சேமிப்பை இதுவரை இல்லாத வகையில் எளிதாகவும், பாதுகாப்பாகவும், எளிமையாக அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்களது வைப்புத் தொகைகளை ஒரே சீரான மற்றும் பாதுகாப்பான செயல்முறை வழியாக டிஜிட்டல் முறையிலேயே முதலீடு செய்யவும் அவற்றை நிர்வகிக்கவும் முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி வருவாயுடன் முழுமையான மன நிம்மதியும் உறுதி செய்யப்படுகிறது. ஆன்லைன் முறையிலான இந்த பரிவர்த்தனையை இந்நிறுவனத்தின் இணையதளம் வழியாக எளிதாக மேற்கொள்ள முடியும்.