Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,543 கோடியாக அதிகரிப்பு
    வணிகம்

    சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,543 கோடியாக அதிகரிப்பு

    adminBy adminMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,543 கோடியாக அதிகரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையைச் சேர்ந்த வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது.

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறியதாவது: சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2024-2025-ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,543 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2023-24-ம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம். செயல்பாட்டு லாபம் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

    கடந்த நிதியாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் 9 சதவீதம் அதிகரித்து ரூ.28,405 கோடியைத் தொட்டுள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து ரூ.51,476 கோடியாக உள்ளது.

    கடந்த 2024-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்பட்ட கடன்கள் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

    கடந்த நிதியாண்டுக்கு 210 சதவீத இறுதி டிவிடெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்டாக கிடைக்கும்.

    நிறுவனத்தின் லாப விகிதம் அதிகரித்து காணப்பட்டாலும் வழங்கப்பட்ட கடன்வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு, கடந்த நிதியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல், மந்தமான திருவிழா சீசன், கடுமையான கோடை காலம் ஆகியவை காரணமாக அமைந்துவிட்டது.

    ஆனால் நடப்பாண்டில் தனியார் நுகர்வு மேம்படுவதால் தனியார் துறை மூலதனம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ராஜீவ் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் உலக சராசரியைவிட மிகவும் குறைவு

    June 30, 2025
    வணிகம்

    சுந்தரம் பைனான்ஸ் நிறுவன வட்டி விகிதங்கள் மாற்றம்

    June 30, 2025
    வணிகம்

    இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு

    June 30, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத் துறை அறிவிப்பு
    • ‘விக்கெட்களை வீழ்த்துவதற்கே முன்னுரிமை’ – பிரசித் கிருஷ்ணா
    • கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!
    • மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகள் அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
    • நாள்பட்ட சிறுநீரக நோய்: இந்த எளிய சமையலறை மூலப்பொருள் நாள்பட்ட சிறுநீரக நோய் முன்னேற்றத்தை மெதுவாக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.