Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சிறிய ஜவுளி பூங்கா திட்டத்தில் ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் – கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு
    வணிகம்

    சிறிய ஜவுளி பூங்கா திட்டத்தில் ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் – கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறிய ஜவுளி பூங்கா திட்டத்தில் ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் – கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி அரசு மானியமாக பெறலாம். இந்தச் சலுகையை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஜவுளித்துறையில் பல்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழக ஜவுளித்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் 2022-ம் ஆண்டு துணிநூல் துறை உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசால் தற்போது சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்தில் மூன்று தொழில் முனைவோர்களால் மூன்று தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத தொகை அல்லது ரூ.2.50 கோடி என இவற்றில் எது குறைவோ அது அரசு மானியமாக வழங்கப்படும்.

    தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடர்பான பொது சேவை கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய இனங்கள் மானியம் பெற தகுதி பெறும் இனங்கள் ஆகும். மேற்படி மானியத் தொகை பணி முன்னேற்றத்தின் அடிப்படையில் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர், ஈரோடு, தர்மபுரி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 19 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நூற்பாலைகளை தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நவீனப்படுத்தவும், வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் நூற்புபிரிவுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு சிறப்பு திட்டம் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு பெறப்படும் கடனிற்கு செலுத்தப்படும் வட்டிக்கு மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    2024 டிசம்பர் 9-ம் தேதிக்கு பின் வங்கிக்கடன் பெற்று இயந்திரங்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற இயலும். ரிங் ஸ்பின்னிங்,ஓபன் எண்ட் ஸ்பின்னிங், ஏர்ஜெட் ஸ்பின்னிங் பிரிவில் உள்ள நூற்பாலைகள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். மேற்கண்ட திட்டங்களின்கீழ் பயன் பெற விரும்பும் தொழில்முனைாவர் மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகத்தை 0421-2220095 என்ற தொலைபேசி எண்ணிலும் rddtextilestpr@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    உரத் தட்டுப்பாடு: தவிக்கும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள்!

    September 11, 2025
    வணிகம்

    கிலோ ரூ.2 – தக்காளி விலை வீழ்ச்சியால் தென்காசி விவசாயிகள் வேதனை

    September 11, 2025
    வணிகம்

    இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்: நடப்பு நிதியாண்டின் கணிப்பை உயர்த்தியது ‘பிட்ச்’

    September 11, 2025
    வணிகம்

    காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    September 11, 2025
    வணிகம்

    உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!

    September 11, 2025
    வணிகம்

    இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “மதுரை விமான நிலையத்துக்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் சூட்டுக” – சீமான்
    • சரோஜினி நகர் உடைகள் உண்மையில் இறந்தவர்களிடமிருந்து வந்ததா? இங்கே உண்மை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொலைநோக்கி மீன்: இந்த தொலைநோக்கி கண்கள் கொண்ட ஆழ்கடல் வேட்டைக்காரர் ஒரு மேற்பார்வை திரைப்படத்திலிருந்து நேராக வெளியேறுகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாணவர்களுக்கு உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
    • தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.