Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை
    வணிகம்

    ‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம். இந்நிறுவனம் 60 கோடி இந்தியர்கள், 2.5 கோடி சிறு, குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது. சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது. உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது.

    ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறைகிறது. கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும். எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என தெரிந்து கொள்ள ஒருவர் இரண்டு, மூன்று வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தால் சிபில் ஸ்கோர் குறையும்.

    சிபில் ஸ்கோர் குறைந்தது 300, அதிகம் என்பது 900. ஆனால், கடனே வாங்காதவருக்கு மைனஸ் ஒன்று பூஜ்யம் என ஸ்கோர் வரும். அப்படியே அவருக்கு கடன் கிடைத்தாலும் வட்டி அதிகம். கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப வட்டி மாறும். பெரும்பாலான கடனாளிகளின் வட்டி கூடுதலாகும். 800 என்பது தான் ஆகச் சிறந்த ஸ்கோர். இதை பெரும்பாலானவர்களால் அடையவே முடியாது.

    கல்விக் கடன் பெற மாணவர்களும், பெற்றோர்களும் அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர். கடனே வாங்காத நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சிபில் ஸ்கோர் வருகிறது. அதை நேர் செய்வது கடினம். சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம். இது எதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடையாது. வேண்டுமென்றே பணத்தை திருப்பிக் கட்டாத கடனை, தள்ளுபடி போக ஏதோ ஒரு தொகை, செலுத்தினாலும், ஓராண்டுக்கு பிறகு அவருக்கு மீண்டும் கடன் கிடைக்கும்.

    கடந்த 2002 வரை ரிசர்வ் வங்கி தான் கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானித்து வந்தது. அதற்குப் பிறகு தான் சிபில் உள்ளே நுழைந்தது. சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல் முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி.

    கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பதை கைவிடவேண்டும். முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படை தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிக்கவும், அதிலுள்ள குறைகளை எளிதாக தீர்க்கவும் வழிவகை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    வணிகம்

    வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து

    June 27, 2025
    வணிகம்

    சென்செக்ஸ் 1,000 புள்ளி உயர்வு

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷெஃபாலி ஜாரிவாலா 42: 5 மணிக்கு செல்கிறார், உடனடி கவனம் தேவைப்படும் இருதயக் கைதின் திடீர் அறிகுறிகள்
    • அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    • கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து
    • அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? – ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்
    • அது வெறும் நெஞ்செரிச்சல் என்று அவளிடம் கூறப்பட்டது -இப்போது அவளுக்கு அரிய மற்றும் ஆக்கிரமிப்பு வயிற்று புற்றுநோயுடன் வாழ 12 மாதங்கள் உள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.