இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஈரோடு டவுன் போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் ஏராளமான ஜவுளி கடைகளை அமைத்ததால், வணிக வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்வது குறைந்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து சிறு, ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையர், போலீஸ் எஸ்பி, ஆட்சியர் ஆகியோரிடம் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

