Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!
    வணிகம்

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.

    சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதியன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

    இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தி உள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.8) முதல் அமலுக்கு வருகிறது.

    இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. எனினும், சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விலைக் குறைப்புக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது.

    பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த வரி அதிகரிப்பு நாளை (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று கலால் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன,” என்று எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

    நரேந்திர மோடி அரசு தனது 11 ஆண்டு கால ஆட்சியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்த போதெல்லாம் கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. மொத்தத்தில், அந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11.77 ஆகவும், டீசலுக்கான வரி லிட்டருக்கு ரூ.13.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.99,000 கோடியாக இருந்த கலால் வரி வசூல், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.2,42,000 கோடியாக உயர்ந்தது.

    2017 அக்டோபரில் கலால் வரியில் 2 ரூபாயை அரசு குறைத்தது. ஒரு வருடம் கழித்து மேலும், ரூ.1.50 குறைத்தது. அதன் பின்னர், ஜூலை 2019 இல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. மீண்டும் மார்ச் 2020 இல் லிட்டருக்கு கலால் வரியில் ரூ.3 உயர்த்தியது. மார்ச் 2020 முதல் மே 2020 வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 உயர்த்தப்பட்டது. எனினும், அந்த வரி உயர்வை திரும்பப் பெற்றது.

    கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்தது. டெல்லியில் பெட்ரோலின் தற்போதைய விலை ரூ.94.77 ஆகவும், டீசலின் விலை ரூ.87.67 ஆகவும் உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உணவுகள் நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏன்
    • ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு
    • வங்கதேச கேப்டன் ஷாண்டோ ராஜினாமா
    • மார்கன்: திரை விமர்சனம்
    • ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.