Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு
    வணிகம்

    கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த நிறுவனத்தினர் செலுத்தி வரும் வரியினங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி என இருபிரிவுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தொழில்துறையினர் கூறி வரும் நிலையில் சமீப காலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின்(டான்சியா) துணை தலைவர் சுருளிவேல், ‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி திட்டத்தில் வரி விதிப்பில் தொடங்கி கணக்குகள் தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை களில் தொழில்துறையினர் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த தொழில் துறையினருக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து மத்திய, மாநில ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சமீப காலமாக புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    மாநில(தமிழ்நாடு அரசு) ஜிஎஸ்டி அலுவலகம் சார்பில் அவுட்சோர்ஸிங் முறையில் ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு ள்ளது. இதன்பேரில் அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினருக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

    தொழில் நிறுவனத்தினர் மாதந்தோறும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அடுத்த மாதங்களில் 10-ம் தேதிக்குள் கணக்கு களை தாக்கல் செய்தும், 20-ம் தேதிக்குள் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் 20-ம் தேதிக்கு பின் வரி செலுத்த காலதாமதம் செய்தால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.50 வீதம் அபராதம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தொழில் துறையினர் வழங்கும் பொருட்களுக்கு உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய அரசு உத்தரவிட்ட போதும் நடைமுறையில் மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்கொண்டுதான் தொழில் துறையினர் வரி செலுத்தி வருகின்றனர்.

    இத்தகைய சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் தொடங்கி 2022-ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களை கண்டறிந்து தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. தவிர மாநில ஜிஎஸ்டி நிறுவனத்தின் அனுமதி பெற்ற ஆந்திர நிறுவனம் தமிழகத்திலுள்ள தொழில்துறையினருக்கு தினமும் நோட்டீஸ் வழங்கி வருகிறது.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள்(உற்பத்தி, சேவை இரண்டும் சேர்த்து) உள்ள நிலையில் தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை எம்எஸ்எம்இ துறையை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.

    எனவே இது குறித்து பல்வேறு தொழில்துறையினர் ஒன்றிணைந்த ‘போசியா’ தொழில் அமைப்பு சார்பில் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளை விரைவில் நேரில் சந்தித்து இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளோம். தொடரும் பட்சத்தில் போராட்டம் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    நாளை முதல் தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அவதி

    August 14, 2025
    வணிகம்

    சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்த ஐசிஐசிஐ வங்கி!

    August 13, 2025
    வணிகம்

    வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை

    August 13, 2025
    வணிகம்

    கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்

    August 13, 2025
    வணிகம்

    8 ஆண்டுகளில் இல்லாத அளவாக சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைவு

    August 12, 2025
    வணிகம்

    சென்னையில் இன்று சற்றே குறைந்த தங்கம், வெள்ளி விலை

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கூலி’ விமர்சனம்: ரஜினி – லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி?
    • கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
    • நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்வதற்கு முன் இந்த 7 காசோலைகளைத் தவிர்க்கக்கூடாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • நடிகர் நிவின் பாலி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.