Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»கிலோ ரூ.2 – தக்காளி விலை வீழ்ச்சியால் தென்காசி விவசாயிகள் வேதனை
    வணிகம்

    கிலோ ரூ.2 – தக்காளி விலை வீழ்ச்சியால் தென்காசி விவசாயிகள் வேதனை

    adminBy adminSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கிலோ ரூ.2 – தக்காளி விலை வீழ்ச்சியால் தென்காசி விவசாயிகள் வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தென்காசி மாவட்டத்தில் தக்காளிப் பழம் கிலோ ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது. ஆலங்குளம், கீழப்பாவூர், சுரண்டை, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, அகரக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தனர்.

    இந்நிலையில், சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தக்காளிப் பழம் விலை படிப்படியாக படிப்படியாக குறையத் தொடங்கியது. பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சந்தையில் ஒரு கிலோ தக்காளிப்பழம் ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சில இடங்களில் தக்காளிப் பழங்களை பறித்து, வயலிலேயே கொட்டியுள்ளனர். சில விவசாயிகள் தக்காளி பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற எந்த பராமிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் அப்படியே பராமரிப்பின்றி விட்டுள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “தக்காளிப் பழம் விலை வீழ்ச்சியால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளிப் பழங்களை பறித்து சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி, சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். இதற்கான ஆள் கூலி, வாகன வாடகை, சந்தையில் கமிஷன் போக வருமானம் எதுவும் இருக்காது. இந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்வதற்காக பயிர்களை பராமரிக்க மருந்து தெளித்தல், உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளை செய்ய செலவு செய்தால் நஷ்டம் அதிகமாகும். இதனால் கடந்த சில நாட்களாக பயிர்களை பராமரிக்காமல் விட்டுவிட்டோம். தக்காளிப் பழங்கள் செடியிலேயே பழுத்து வீணாகின்றன.

    கிலோ ரூ.40 வரை விற்பனையானபோது சில விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விலை வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. தற்போது 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளும் விலை வீழ்ச்சியால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் பரவலாக தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாக தக்காளி வரத்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    உரத் தட்டுப்பாடு: தவிக்கும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள்!

    September 11, 2025
    வணிகம்

    இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்: நடப்பு நிதியாண்டின் கணிப்பை உயர்த்தியது ‘பிட்ச்’

    September 11, 2025
    வணிகம்

    காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    September 11, 2025
    வணிகம்

    உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!

    September 11, 2025
    வணிகம்

    இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்

    September 10, 2025
    வணிகம்

    இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பாமகவில் இருந்து அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை” – கே.பாலு
    • உங்கள் வீட்டில் மறைக்கப்பட்ட அழுக்கு மண்டலங்கள் மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “மதுரை விமான நிலையத்துக்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் சூட்டுக” – சீமான்
    • சரோஜினி நகர் உடைகள் உண்மையில் இறந்தவர்களிடமிருந்து வந்ததா? இங்கே உண்மை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொலைநோக்கி மீன்: இந்த தொலைநோக்கி கண்கள் கொண்ட ஆழ்கடல் வேட்டைக்காரர் ஒரு மேற்பார்வை திரைப்படத்திலிருந்து நேராக வெளியேறுகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.