Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்?
    வணிகம்

    கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்?

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மா விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருவவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து, மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், போச்சம்பள்ளி அருகே என்.தட்டக்கல், வீரமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை இடதுபுற பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவ குரு மற்றும் சில விவசாயிகள் கூறியதாவது: போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் பலர் மாந்தோட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்காக, ஆண்டு முழுவதும் மா மரங்களைப் பராமரித்து, பருவ காலங்களில் கிடைக்கும் வருவாய் மூலம் குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓராண்டுக்கான குடும்பச் செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பேரிடர், பூச்சித் தாக்குதல், மாங்கூழ் ஆலை நிர்வாகத்தினர் சின்டிகேட் விலை நிர்யணம் உள்ளிட்ட காரணங்களால், மா விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நிகழாண்டில் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. இனியும் மாமரங்களைப் பராமரித்து செலவு செய்து, வருவாய் இழப்பைச் சந்திக்க வேண்டுமா என விவசாயிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய தங்கள் தோட்டங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சில விவசாயிகள் மா மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி இருந்த நிலையில், தற்போது 35 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கிய நிலையில், வரும் ஆண்டுகளில் மேலும் குறையும் நிலையுள்ளது.

    ஆந்திராவில் மா விவசாயிகளைக் காக்க அம்மாநில அரசு மா கொள்முதல் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால், இங்கு மா விவசாயிகள் புறக்கணிக்கபடுகின்ரனர். மாங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கூட செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் மா சாகுபடி பரப்பு வெகுவாக குறையும். எனவே, தமிழக அரசு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தொலைநோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!
    • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
    • உணவு லேபிள்களைப் படிப்பது போதாது! இந்த அன்றாட பொருட்கள் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்றன; ஏன் என்று தெரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ”ஜூலை 1 முதல் 3.16% கட்டணம் உயர்த்த மின்வாரியம்  முடிவு” – அன்புமணி குற்றச்சாட்டு
    • 5 ஸ்டைல் ​​பாடங்கள் சோஹ்ரான் மம்தானியிடமிருந்து நாம் முற்றிலும் திருடலாம் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.